முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவைப்பட்டால் சிதம்பரத்தை கைது செய்து விசாரணை செய்யலாம் - அமலாக்கத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை விசாரிக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லி திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்து கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கடந்த வாரம் மனுத் தாக்கல் செய்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று முன்தினம் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வில் விசாரணைக்கு வந்த போது ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.  அதை தொடர்ந்து இந்த வழக்கு நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, ப.சிதம்பரத்தை மீண்டும் கைது செய்யக்கூடாது என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, திகார் சிறையில் ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்திக் கொள்ளலாம் எனவும் அனுமதி வழங்கியது. தேவைப்பட்டால் அவரை கைது செய்யவும் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், இன்று காலை 8.30 மணிக்கு திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து