எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி : ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை விசாரிக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லி திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்து கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கடந்த வாரம் மனுத் தாக்கல் செய்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று முன்தினம் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வில் விசாரணைக்கு வந்த போது ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அதை தொடர்ந்து இந்த வழக்கு நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, ப.சிதம்பரத்தை மீண்டும் கைது செய்யக்கூடாது என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, திகார் சிறையில் ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்திக் கொள்ளலாம் எனவும் அனுமதி வழங்கியது. தேவைப்பட்டால் அவரை கைது செய்யவும் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், இன்று காலை 8.30 மணிக்கு திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |