முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை மேலும் உயர்வு - சவரனுக்கு ரூ. 152 அதிகரிப்பு

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2019      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : தங்கம் விலை நேற்று சவரனுக்கு மேலும் 152 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 29 ஆயிரத்து 304 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

தங்கம் விலை கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஏற்ற, இறக்கங்களுடன் காணப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு சவரன் தங்கம் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. பிறகு விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. ரூ.30 ஆயிரத்தை தாண்டிய நிலையில் அடுத்த 10 நாட்களில் பவுனுக்கு ரூ.1,500 வரை குறைந்தது. அதன் பிறகும் தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் காணப்பட்டு வந்தது. அக்டோபர் மாதத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து ரூ.29 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று உயர்ந்து ஒரு பவுன் ரூ. 29,152-க்கும், ஒரு கிராம் ரூ.3,644-க்கும் விற்பனையானது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை மேலும் உயர்ந்தது. நேற்று காலை சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ரூ.3,662-க்கும், சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.29,296-க்கும் விற்பனையானது. பிற்பகல் சவரனுக்கு மேலும் 8 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.29,304-க்கும், ஒரு கிராம் ரூ.3663-க்கும் விற்பனை ஆனது. தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்தது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.48-ல் இருந்து 40 காசுகள் உயர்ந்து நேற்று ரூ.48.40 ஆக இருந்தது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.48 ஆயிரத்து 400-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து