முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக தடகளம் சாம்பியன் ஷிப்ஸ் 2022-க்கு தள்ளி வைப்பு

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2021-க்கு தள்ளி வைக்கப்பட்டதன் காரணமாக உலக தடகளம் சாம்பியன்ஷிப்ஸ் 2022-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9 - ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி இருந்ததால் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் நலன் கருதி ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. அடுத்த வருடம் ஜூலை மாதம் 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி வரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் உலக தடகளம் சாம்பியன்ஷிப்ஸ் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் 6 - ந்தேதியில் இருந்து 15 - ந்தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்தது. தற்போது ஒலிம்பிக் போட்டி 8-ந்தேதி வரை நடைபெற இருப்பதால் உலக தடகளம் சாம்பியன்ஷிப்ஸ் 2022-க்கு மாற்றப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு போட்டிக்கு தயாராகும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஒருங்கிணைப்பார்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து