முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி-7 உச்சி மாநாடு: பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு

புதன்கிழமை, 3 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : அமெரிக்காவில் நடைபெறும் அடுத்த ஜி-7 மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். 

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  ஜி-7 உச்சி மாநாட்டு பங்கேற்பு நாடுகளை அதிகரிக்க டிரம்ப் விரும்புகிறார். இந்தச் சூழ்நிலையில்தான் பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா இந்த அழைப்பினை ஆராய்ந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தியா கோவிட்-19 பெருந்தொற்று விவகாரத்தில் உலக அரங்கில் முக்கியப் பங்கு வகிக்கவுள்ளது.  பிரதமர் மோடி ஏற்கெனவே கடந்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் அழைப்பை ஏற்று ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தற்போதைய ஜி-7 பழையதாகி விட்டது.

எனவே இதில் ரஷ்யா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளையும் சேர்க்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து