முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கிளை செயலாளர் மரணம்: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்

சனிக்கிழமை, 4 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : திருவள்ளூர் மேற்கு மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் வாயலூர் காலனி, கருமாரியம்மன் கோவில் தெரு கிளை கழக செயலாளர் மறைவுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் வாயலூர் காலனி, கருமாரியம்மன் கோவில் தெரு கிளை கழக செயலாளர் எஸ். சிலம்பரசன் முன்விரோதம் காரணமாக அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

இந்த படுகொலையை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு முறையான தண்டனையை பெறுவார்கள். அன்பு சகோதரர் சிலம்பரசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து