முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8.5 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.17 ஆயிரம் கோடி : திருப்தியளிப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாட்டிலுள்ள 8.5 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ரூ.17 ஆயிரம் கோடி சென்று சேர்ந்தது திருப்தியளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நாட்டில் வேளாண்மை துறையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ. ஒரு லட்சம் கோடி மதிப்பிலான நிதி திட்டத்தை நிறைவேற்ற மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அப்போது பிரதமர் விவசாயிகள் திட்டத்தின் கீழ் 6-வது தவணையாக 8.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி வழங்கும் பணியையும் தொடங்கி வைத்தார். 

அதன்பின்பு பிரதமர் மோடி காணொலி மூலம் பேசும் பொழுது கூறியதாவது, பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், ஒரே தவணையில் நாட்டிலுள்ள 8.5 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.17 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டு உள்ளது. 

இடைத்தரகர்களோ அல்லது கமிஷனோ கிடையாது.  நிதியானது நேரடியாக விவசாயிகளை சென்றடைந்து உள்ளது. இதனால் நான் திருப்தியடைந்து உள்ளேன்.  ஏனெனில் திட்டத்தின் சாராம்சம் பூர்த்தி அடைந்து உள்ளது என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து