எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சாலை விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 24 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், ஆவூர் கிராமத்தைச் சேர்ந்த ஜீவன்ராஜ் என்பவரின் மகன்கள் செல்வன் செக்சன், செல்வன் ஜான்சன் மற்றும் சவரி என்பவரின் மகன் செல்வன் சந்தோஷ் ஆகிய மூன்று சிறுவர்கள் சின்ன குளத்தில் குளிக்க சென்ற போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும், கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் வட்டம், தச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனையப்பன் மற்றும் அவரது மனைவி அம்பிகா ஆகிய இருவரும் சேலம் - கள்ளக்குறிச்சி சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், மாக்கினங்கோம்பை கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவரின் மகன் தமிழரசன் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், கண்ணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தாய் என்பவரின் மகன் பூசைதுரை எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம், மல்லகுண்டா கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் சிறுமி ரேகா மற்றும் திருப்பதி என்பவரின் மகள் சிறுமி ஜனனி ஆகிய இருவரும் கரடிகுட்டை ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தியையும், கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், பைங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒருமாவுநின்றவிளையைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகன் ஜான் கென்னடி மேலகுளத்தில் நிலை தடுமாறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், விளவங்கோடு வட்டம், குழித்துறை கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ நல்லூர்குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், கிள்ளியூர் வட்டம், முள்ளங்கினாவிளை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் தென்னை மரம் வெட்டும் போது, அவர் மீது மரம் விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், கிள்ளியூர் வட்டம், பைங்குளம் கிராமத்தைச் சேர்ந்த யானோஸ் என்பவரின் மனைவி மார்த்தாள் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், ஆட்டையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் நவீன்குமார் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், தோட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் அருளானந்தம் என்பவரின் மகன் செல்வன் சதீஸ் அருளானந்தம், ஆரோக்கிய சகாயராஜ் என்பவரின் மகன் செல்வன் ஷஜூத் புருனோ மற்றும் அன்பழகன் என்பவரின் மகன் செல்வன் ராகுல் கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரும் கொண்டாபிள்ளை என்ற குளத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும், வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வட்டம், எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவரின் மகள் செல்வி. கீர்த்தி மற்றும் முரளி என்பவரின் மகள் செல்வி பாவனா ஆகிய இருவரும் கொட்டாற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோலைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மரம் விழுந்ததில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,
சென்னை மாவட்டம், திருவொற்றியூர் வட்டம், எர்ணாவூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் தமிழரசன் என்பவர் கடலில் குளிக்கும் போது, கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டம், அன்னூர் வருவாய் கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவரின் மகன் கதிரேசன், துரைசாமி என்பவரின் மகன் ரகுராம் மற்றும் முகுந்தராஜ் என்பவரின் மகன் பிரேனஷ் ஆகிய மூன்று பேரும் பவானி ஆற்றின் நீர்த்தேக்கப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
சாலை விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 24 நபர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 24 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 18 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 19 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
18 Mar 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காமி விமர்சனம்
18 Mar 2024நாயகன் விஷ்வக் சென்னின் தேகம் மீது மனிதர்கள் லேசாக தொட்டால் கூட அவருக்கு மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு ஏற்படுவதோடு, உடலில் மாற்றம் ஏற்பட்டு சுயநினைவின்றி சில மணி நேர
-
காடுவெட்டி விமர்சனம்
18 Mar 2024கதையின் நாயகன் ஆர்.கே.சுரேஷ், ”பெண்ணை தொட்டா வந்து நிற்பேண்டா...” என்று சொல்லிக்கொண்டு அடிதடியில் ஈடுபடுகிறார், ஊர் மக்களுக்கு உதவி செய்கிறார், காதல் தொல்லை கொடுக்கும்
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
மேற்குவங்க மாநில டி.ஜி.பி. மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு
18 Mar 2024புதுடெல்லி : மேற்கு வங்க டி.ஜி.பி. ராஜீவ்குமார் மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
ரோமியோ இசை வெளியீடு
18 Mar 2024அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ரோமியோ’. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்திருக்கிறார்.
-
அ.தி.மு.க. சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
18 Mar 2024சென்னை : அ.தி.மு.க. கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
பிரேமலு விமர்சனம்
18 Mar 2024கல்லூரியில் படிக்கும் நாயகன் சக மாணவியை ஒருதலையாக காதலிக்கிறார்.
-
மதுபான கொள்கை வழக்கில் கைது: சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி : மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
வரும் 21-ம் தேதிக்குள் தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தகவலையும் வெளியிட வேண்டும்: எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
18 Mar 2024புதுடெல்லி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான எஸ்.பி.ஐ.
-
திருப்பூரில் சுப்புராயன், நாகையில் செல்வராஜ்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி உறுதியானது?
18 Mar 2024சென்னை : அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. கூட்டணி உறுதியானதாகவும், நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
கா இசை வெளியீடு
18 Mar 2024நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா, தற்போது நடித்து வரும் 'கா' படத்தில் வனவிலங்கு புகைப்பட கலைஞராக நடித்து வரும் நிலையில், இம்மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா
-
மகளிர் ஐ.பி.எல்.லில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆர்.சி.பி.
18 Mar 2024புதுடெல்லி : மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
-
அணியுடன் இணைந்தார் கோலி
18 Mar 20242024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது.