முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹத்ராஸ் வழக்கு விசாரணையை அலகாபாத் ஐகோர்ட் கண்காணிக்கும்: சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 27 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஹத்ராஸ் பெண் பலாத்கார வழக்கு கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. 

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரைத்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ஹத்ராஸ் விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் அல்லது ஐகோர்ட்டின் ஓய்வு நீதிபதி தலைமையிலான சிறப்பு குழு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் இதில் நடந்த உன்மை என்னெவென்று வெளிப்படையாக தெரியவரும்.மேலும் சி.பி.ஐ. விசாரணையாகவே இருந்தாலும் கூட ஓய்வு பெற்ற நீதிபதிகளின் கண்காணிப்பில் தான் அது நடைபெற வேண்டும்.

குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் வைத்து இந்த விசாரணை நடைபெற்றால் அது நிச்சயம் நியாயமானதாக இருக்காது என்பதால் வழக்கை டெல்லிக்கு மாற்றி, அதனை நடத்தி முடிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட மனுக்கள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நேற்று விசாரணை வந்தபோது, ஹத்ராஸ் பெண் பலாத்கார வழக்கு கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. அலகாபாத் ஐகோர்ட்டே ஹத்ராஸ் வழக்கு விசாரணையை கண்காணிக்கும். வழக்கு விசாரணையை டெல்லிக்கு மாற்றுவது குறித்து சுப்ரீம் கோர்ட் முடிவு எதுவும் எடுக்கவில்லை.

சி.பி.ஐ. தனது நிலை அறிக்கைகளை அலகாபாத் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யும். சி.பி.ஐ. விசாரணையை முடிவுக்குக் கொண்டு வருவது பொருத்தமானது. சி.பி.ஐ. விசாரணையை முடித்த பிறகு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுவது பற்றி பரிசீலிக்கலாம். என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து