எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதனை கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் கண்காணித்து உரிய அறிவுரைகள் வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
‘நிவர்’ புயலின் போது மக்கள் அளித்த ஒத்துழைப்பு போன்று இப்போதும் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன்பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:–
நிவர் புயலின் போது முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படாத வகையில் புதிய அத்தியாயத்தை, புதிய வழிகாட்டுதலை, புதிய முன்மாதிரியை, புதிய இலக்கணத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த ஆண்டு வடகிழக்குபருவமழை 28.10.2020 அன்றுதொடங்கி மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் 29.11.2020 வரை உள்ள இயல்பான மழையளவு 352.6 மி.மீ.-ல், 301.8 மி.மீ. அளவு மட்டுமே பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவை விட 14 சதவீதம் குறைவாகும்.
சென்னை, திருப்பத்தூர், விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமான அளவும், கோயம்புத்தூர், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, இராணிப்பேடை, வேலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மற்றும் ஆகிய 18 மாவட்டங்களில் இயல்பான அளவும் மீதமுள்ள 16 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான அளவும் மழை பதிவாகியுள்ளது.
2566 ஏரிகள் நிரம்பின
தமிழகத்தில் உள்ள 14 ஆயிரத்து 144 பாசன ஏரிகளில், 2,566 ஏரிகள் 100 விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும், அதிக மழைப் பொழிவு ஏற்பட்டுள்ள 21 மாவட்டங்களில், 9,524 பாசன ஏரிகளில், 2,270 ஏரிகள் 100 விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ளன. இதுவன்றி, கடலோர மாவட்டங்களில் உள்ள 7378 ஏரிகளில், 1541 ஏரிகள் 100 விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ளன.
இந்திய வானிலை மையத்தின் அறிக்கையின்படி தெற்கு அந்தமான் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுபகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவடைந்து உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை தென் தமிழக கடற்கரையை அடைய வாய்ப்பு உள்ளது.
தென் மாவட்டங்களில் கனமழை
இதன் காரணமாக இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியகுமரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய கூடும்.
நாளை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய கூடும். தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும். 3.12.2020 கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
கூடுதல்தலைமைச் செயலர், வருவாய் நிருவாகஆணையரின் ஆணையின்படி, துணைஆட்சியர் தலைமையில் பல்துறை அலுவலர்களுடன் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதுடன் நிலைமை தொடந்து கண்காணிக்கப்பட்டு மாவட்ட அளவில் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
நிவர் புயலின் போது எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை, ஆனால் அதன்பின்னர் சுவர் இடிந்து விழுந்து, மரம் விழுந்து இறந்தவர்களுக்கு முதல்வர் 10 லட்ச ரூபாய் நிவாரண நிதியை அறிவித்துள்ளார். அது போன்று சேதம் அடைந்த வீடுகள், உயிரிழந்த கால்நடைகள் நிவாரண நிதியை முதல்வர் அறிவித்துள்ளார்.
முகாம்களில் 2½ லட்சம் பேர்
நிவர் புயலின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களில் 2.50 லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவம், குழந்தைகளுக்கு பால்பவுடர் உள்ளிட்ட அத்தியவாசிய தேவைகளை நிறைவேற்றி தரப்பட்டது.
புயல் சேதங்களை பார்வையிட வரும் மத்திய குழு முதல்வர், தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்தி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள். அதிக மழை பெய்யும் போது வல்லரசு நாடுகளில் கூட மழை தேங்கி அதன் பின்னரே வடிகிறது. அது போல 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும் கூட அதீத மழை பெய்த போதும் கூட பெருமளவில் மழை நீர் தேங்கவில்லை.
ஆக்கிரமிப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த அறிவுரையின் படியும், முதல்வரின் நடவடிக்கையின் காரணமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதன் காரணமாக தான் மழை நீர் தேங்கும் பகுதிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.
ஆகவே நிவர் புயலின் போது எப்படி அரசின் அறிவிப்புகளை தொடர்ந்து கண்காணித்து மக்கள் விழிப்புடன் 100 சதவீதம் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து அரசின் வழிகாட்டுதலை பின்பற்றியது போல புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பாக மக்கள் அச்சம் அடையாமல், விழிப்புணர்வுடன் இருந்து அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்: விஜய்
11 Jul 2025சென்னை : மாவீரர் அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.
-
குன்றக்குடி அடிகளாரின் தொண்டு தொடரட்டும்: முதல்வர் புகழாரம்
11 Jul 2025சென்னை : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கீழடி விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
11 Jul 2025சென்னை : கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார்.
-
வெள்ளம், நிலச்சரிவு பாதித்த 6 மாநிலங்களுக்கு ரூ.1,067 கோடி நிதி
11 Jul 2025புதுடெல்லி : வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,066 கோடியே 80 லட்சத்தை விடுவிக்க
-
அழுத்தத்தைக் கையாள தோனியிடம் கற்றுக் கொண்டேன்: தீப்தி சர்மா
11 Jul 2025லண்டன் : அழுத்தத்தைக் கையாள்வதை தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.
-
கீப்பராக துருவ் ஜுரெல்: பி..சி.சி.ஐ.
11 Jul 2025இந்தியா - இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது.
-
இந்திய அணியில் இடம்பெறுவதற்கு தகுதியான நபர் நிதீஷ் குமார் ரெட்டி : அனில் கும்ப்ளே புகழாரம்
11 Jul 2025லண்டன் : இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறுவதற்கு தகுதியான நபர் என்பதை நிதீஷ் குமார் ரெட்டி நிரூபித்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ள
-
என்னை செதுக்கியவர்: கம்மின்சை புகழ்ந்த நிதீஷ் ரெட்டி
11 Jul 2025லண்டன் : இந்திய வீரர் நிதீஷ் குமார் ரெட்டி தனது சிறப்பான பந்துவீச்சுக்குக் காரணம் பாட் கம்மின்ஸ் எனக் கூறியுள்ளார்.
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த கோலியின் விமர்சனத்திற்கு முதல் முறையாக காம்பீர் பதில்
11 Jul 2025பெங்களூரு : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விராட் கோலியின் விமர்சனத்திற்கு முதல் முறையாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் காம்பீர் பதிலளித்துள்ளார்.
-
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகிறார் சுப்மன் கில்? - தேர்வு செய்ய பி.சி.சி.ஐ ஆர்வம்
11 Jul 2025புதுடெல்லி : இலங்கை, ஐ.சி.சி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
5 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா: - இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
11 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மராத்திய ராணுவ தளங்கள் : மத்திய அமைச்சர் அமித்ஷா புகழாரம்
12 Jul 2025மும்பை : யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மராத்திய ராணுவ தளங்கள் இடம்பெற்றுள்ளதற்கு அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
லாக் அப் மரணங்கள்: விஜய் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்
12 Jul 2025சென்னை, லாக் அப் மரணங்கள் தொடர்பாக, சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் த.வெ.க. தலைவர் விஜயின் தலைமையில் நடைபெற உள்ளது.
-
பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்பதில் ஆயிரம் சதவீதம் உறுதி: த.வெ.க. திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் 100 சதவீதம் அல்ல 1000 சதவீதம் உறுதியாக உள்ளோம் என்று த.வெ.க. தெரிவித்துள்ளது.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
சர்ச்சை கேள்விகள் தவிர்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
12 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வு வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி.
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.