எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதனை கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் கண்காணித்து உரிய அறிவுரைகள் வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
‘நிவர்’ புயலின் போது மக்கள் அளித்த ஒத்துழைப்பு போன்று இப்போதும் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன்பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:–
நிவர் புயலின் போது முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படாத வகையில் புதிய அத்தியாயத்தை, புதிய வழிகாட்டுதலை, புதிய முன்மாதிரியை, புதிய இலக்கணத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த ஆண்டு வடகிழக்குபருவமழை 28.10.2020 அன்றுதொடங்கி மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் 29.11.2020 வரை உள்ள இயல்பான மழையளவு 352.6 மி.மீ.-ல், 301.8 மி.மீ. அளவு மட்டுமே பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவை விட 14 சதவீதம் குறைவாகும்.
சென்னை, திருப்பத்தூர், விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமான அளவும், கோயம்புத்தூர், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, இராணிப்பேடை, வேலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மற்றும் ஆகிய 18 மாவட்டங்களில் இயல்பான அளவும் மீதமுள்ள 16 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான அளவும் மழை பதிவாகியுள்ளது.
2566 ஏரிகள் நிரம்பின
தமிழகத்தில் உள்ள 14 ஆயிரத்து 144 பாசன ஏரிகளில், 2,566 ஏரிகள் 100 விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும், அதிக மழைப் பொழிவு ஏற்பட்டுள்ள 21 மாவட்டங்களில், 9,524 பாசன ஏரிகளில், 2,270 ஏரிகள் 100 விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ளன. இதுவன்றி, கடலோர மாவட்டங்களில் உள்ள 7378 ஏரிகளில், 1541 ஏரிகள் 100 விழுக்காடு கொள்ளளவை எட்டியுள்ளன.
இந்திய வானிலை மையத்தின் அறிக்கையின்படி தெற்கு அந்தமான் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுபகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவடைந்து உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை தென் தமிழக கடற்கரையை அடைய வாய்ப்பு உள்ளது.
தென் மாவட்டங்களில் கனமழை
இதன் காரணமாக இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியகுமரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய கூடும்.
நாளை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய கூடும். தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும். 3.12.2020 கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
கூடுதல்தலைமைச் செயலர், வருவாய் நிருவாகஆணையரின் ஆணையின்படி, துணைஆட்சியர் தலைமையில் பல்துறை அலுவலர்களுடன் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதுடன் நிலைமை தொடந்து கண்காணிக்கப்பட்டு மாவட்ட அளவில் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
நிவர் புயலின் போது எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை, ஆனால் அதன்பின்னர் சுவர் இடிந்து விழுந்து, மரம் விழுந்து இறந்தவர்களுக்கு முதல்வர் 10 லட்ச ரூபாய் நிவாரண நிதியை அறிவித்துள்ளார். அது போன்று சேதம் அடைந்த வீடுகள், உயிரிழந்த கால்நடைகள் நிவாரண நிதியை முதல்வர் அறிவித்துள்ளார்.
முகாம்களில் 2½ லட்சம் பேர்
நிவர் புயலின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களில் 2.50 லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவம், குழந்தைகளுக்கு பால்பவுடர் உள்ளிட்ட அத்தியவாசிய தேவைகளை நிறைவேற்றி தரப்பட்டது.
புயல் சேதங்களை பார்வையிட வரும் மத்திய குழு முதல்வர், தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்தி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள். அதிக மழை பெய்யும் போது வல்லரசு நாடுகளில் கூட மழை தேங்கி அதன் பின்னரே வடிகிறது. அது போல 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும் கூட அதீத மழை பெய்த போதும் கூட பெருமளவில் மழை நீர் தேங்கவில்லை.
ஆக்கிரமிப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த அறிவுரையின் படியும், முதல்வரின் நடவடிக்கையின் காரணமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதன் காரணமாக தான் மழை நீர் தேங்கும் பகுதிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.
ஆகவே நிவர் புயலின் போது எப்படி அரசின் அறிவிப்புகளை தொடர்ந்து கண்காணித்து மக்கள் விழிப்புடன் 100 சதவீதம் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து அரசின் வழிகாட்டுதலை பின்பற்றியது போல புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பாக மக்கள் அச்சம் அடையாமல், விழிப்புணர்வுடன் இருந்து அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
உலகம் அழிவதை தற்போது கடவுள் தள்ளிப்போட்டுள்ளார்: கானா நாட்டு தீர்க்கத்தரிசி அந்தர்பல்டி
25 Dec 2025அக்ரா, நம்மில் பலருக்கு உலகம் அழியப்போகிறது என்ற வார்த்தை 2004-ம் ஆண்டு முதல் கேட்டுக்கொண்டு வருகிறோம்.
-
தங்கம், வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம்..! கடந்த 4 நாட்களில் ரூ.3,360 அதிகரிப்பு
25 Dec 2025சென்னை, தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 160 உயர்ந்து ரூ. 1,02,560 -க்கு விற்பனையாகு புதிய உச்சம் தொட்டுள்ளது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜன. 9-ல் அமித்ஷா தமிழகம் வருகிறார்
25 Dec 2025சென்னை, பா.ஜ.க.
-
2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்கிறார்
25 Dec 2025சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்த
-
தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
25 Dec 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவ
-
இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
25 Dec 2025சென்னை, இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்நடத்திய வன்முறையாளர்களை சம்பவம் நடைபெற்ற மாநிலங்களின் அரசுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வைகோ தெரிவி
-
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் கோலாகம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
25 Dec 2025சென்னை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
-
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை
25 Dec 2025சென்னை, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளிலேயே 3-ம் பருவத்துக்கான பாடப்புத்தகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
ஓ.பி.எஸ்.சும், தினகரனும் தே.ஜ. கூட்டணியில் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
25 Dec 2025கிருஷ்ணகிரி, ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணி யில் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
டெல்லியில் இருந்தபோது சுவாச தொற்று ஏற்பட்டது: மத்திய அமைச்சர் வருத்தம்
25 Dec 2025புதுடெல்லி, டெல்லி இருந்தபோது காற்று மாசு காரணமாக சுவாச தொற்று ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்: போப் 14-ம் லியோ உரை
25 Dec 2025வாடிகன், வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது, போப் 14-ம் லியோ முதல் திருப்பலியில் உரையாற்றினார்.
-
பி.வி.சிந்துவுக்கு பொறுப்பு
25 Dec 2025உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் (BWF) விளையாட்டு வீரர்கள் கமிஷனின் தலைவராக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
சிறுபான்மையினர் மீது தாக்குதல் எதிரொலி: கலவர கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
25 Dec 2025சென்னை, சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தி நாட்டுமக்களைப் பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பலை இரும்புக்கரம்
-
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது செ
-
அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்கும் முறையில் மாற்றம்
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்குவதற்கான குலுக்கல் முறையை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
-
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் ரவி சாஸ்திரி..? முன்னாள் வீரர் பனேசர் பரிந்துரை
25 Dec 2025லண்டன், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் மீது அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியம
-
த.வெ.க. தலைவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கேல் ரத்னா- அர்ஜுனா விருது: 24 வீரர்கள் பெயர் பரிந்துரை
25 Dec 2025புதுடெல்லி, கேல் ரத்னா- அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 24 வீரர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
விருதுகள் வழங்கி...
-
ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்த ஜெலன்ஸ்கி
25 Dec 2025கீவ், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளார்.
-
வேலு நாச்சியார் நினைவு நாள்: த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
25 Dec 2025சென்னை, வேலு நாச்சியார் நினைவு நாளை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
-
பொருளாதாரத்தில் இந்தியா மிக விரைவில் முதல் இடம் பிடிக்கும்: மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை
25 Dec 2025கோவை, பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதல் இடம் பிடிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
-
ராகுல்காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025புதுடெல்லி, ராகுல்காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
-
101-வது பிறந்தநாள்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
25 Dec 2025புதுடெல்லி, வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள 'சதைவ் அடல்' நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.
-
திட்டக்குடி கோர விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Dec 2025சென்னை, திட்டக்குடி கோர விபத்து குறித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி
25 Dec 2025மும்பை, மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி குறித்து உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே புதிய அறிவிப்பை அறிவித்துள்ளனர்.


