முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் எடப்பாடியுடன் பிரதமர் மோடி பேச்சு

புதன்கிழமை, 2 டிசம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். 

வங்கக் கடலில் உருவாகி உள்ள புரெவி புயல் வரும் 4-ம் தேதி அதிகாலை குமரி, பாம்பன் இடையே கரையை கடக்கவுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி தமிழக முதல்வரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என அப்போது பிரதமர் மோடி உறுதியளித்தார். இதற்கு முன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் பிரதமர் மோடி பேசியது குறிப்பிடத்தக்கது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து