அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் .அதனை ஏற்பவர்களே கூட்டணியில் இருப்பார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திருச்சியில் பிரசாரம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
கடந்த மக்களைவை தேர்தலில் அமைந்த கூட்டணியே தற்போது நீடித்து வருகிறது. அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் . அதனை ஏற்பவர்களே கூட்டணியில் இருப்பார்கள் . உட்கட்சி பூசல் என்பது அ.தி.மு.க. வில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ள கட்சிகளிலும் உள்ளது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவித்த பின்னரே கூட்டணிகளின் நிலை தெளிவாகும் மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்கள் என்பதால் நாட்கள் குறைவாக உள்ளது. பொது தேர்வு தொடர்பாக அனைத்து தரப்பினரிடமும் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.