எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எது தவறு, எது சரி என நீங்களும் சொல்லுங்கள், நானும் சொல்கிறேன், நாட்டு மக்கள் தீர்ப்பு கொடுக்கட்டும். நேருக்கு நேர் வந்து பேசுமாறு ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊத்துக்குளி கூட்டத்தில் சவால் விடுத்து உள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், கோபி உட்பட பல்வேறு பகுதிகளில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து நேற்று மாநகர் மாவட்ட பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக தேர்தல் பிரச்சாரம் செய்தார். முன்னதாக கருங்கல்பாளையம் காவிரி கரையில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன், தங்கமணி, ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.வி. ராமலிங்கம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் வி.பி. சிவசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்களை பார்த்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையை அசைத்தார். பின்னர் பன்னீர்செல்வம் பார்க் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
முன்னதாக ஊழல் குறித்து நேரடி விவாதத்துக்கு தயாரா? என்று மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்திருந்தார். இந்நிலையில் இந்த சவாலை ஏற்றுக் கொண்டதாக கூறிய மு.க. ஸ்டாலின், அதற்கு சில தேவையற்ற நிபந்தனைகளை விதித்துள்ளார். சவாலை ஏற்றுக் கொள்பவர்கள் நேரடியாக விவாதிக்க வேண்டுமே தவிர, நிபந்தனைகளை விதிப்பது விசித்திரமானது. முதல்வர் விடுத்திருந்த சவாலில் இருந்து ஸ்டாலின் ஜகா வாங்கியிருப்பது இதன்மூலம் கண்கூடாக தெரிகிறது. இது பற்றி குறிப்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எது தவறு, எது சரி என நீங்களும் சொல்லுங்கள், நானும் சொல்கிறேன்,நாட்டு மக்கள் தீர்ப்பு கொடுக்கட்டும் நேருக்கு நேர் வந்து பேசுங்கள் என்று ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊத்துக்குளியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பதில் சவால் விடுத்தார்.
ஊழல் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று அழைப்பு விடுத்தேன். ஆனால் ஸ்டாலினோ நீதிமன்றத்தில் இருந்து வழக்கை வாபஸ் வாங்குங்கள் என்று கூறுகிறார். மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் அவர் முடிச்சு போடுகிறார். என்னுடைய ஆட்சியில் மடியில் கனம் ஏதும் இல்லை. எனவே நேரில் வாருங்கள் பேசுவோம் என்று முதல்வர் எடப்பாடி பதில் சவால் விடுத்தார்.
இரவு பகலாக அம்மாவின் அரசு மக்களுக்காக உழைத்து வருகிறது என்றும் மக்களை பற்றி சிந்திக்காமல் பொய் கூறி வரும் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுத்தால் அது பொருத்தமாகும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அம்மா மறைவிற்கு பின் நடைபெறும் முதல் சட்டமன்ற பொதுத்தேர்தல் இதுவாகும், எனக்குப் பின்னால் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும். வாழையடி வாழையாக நின்று நாட்டு மக்களுக்கு பாடுபடும் என்று அம்மா சட்டமன்றத்தில் குறிப்பிட்டார். மறைந்த எம்.ஜி.ஆர்., அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களும் நாட்டுக்காக வாழ்ந்தவர்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு ஸ்டாலின் பொய்ப் பிரசாரம் செய்து அவதூறு பரப்பி வருகிறார். அரசு மீது பழி சுமத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். அவர்கள் அமைச்சர்கள் 13 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நமது அரசு மற்றும் அமைச்சர்கள் மீது வீண்பழி சுமத்தி வருகிறார். அ.தி.மு.க. ஆலமரம் போன்றது. எண்ணற்ற திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. ஈரோடு மாநகரில் ஏராளமான திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அம்மா மினி கிளினிக் 6 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. நாடே போற்றும் இந்த திட்டத்தை ஒருவர் மட்டும் குறை கூறுகிறார். என்ன குறைபாட்டை கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. வேண்டுமென்றால் அம்மா மினிகிளினிக் டாக்டர்களிடம் சோதனை செய்து கொள்ளலாம். 2 ஆயிரம் மினிகிளினிக்குகள் திறந்து இந்த அரசு சாதனை படைத்துள்ளது.
தி.மு.க. ஆட்சியிலும் அ.தி.மு.க. ஆட்சியிலும் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை நீங்கள் (மக்கள்) சிந்தித்து பார்க்க வேண்டும். அ.தி.மு.க.வில் ஒருவர் தவறு செய்தால், அவர் யாராக இருந்தாலும் சட்ட ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் தி.மு.க.வில் அதுபோன்ற நிலை இல்லை. இன்று தமிழகம் சட்டம் ஒழுங்கில் முதன்மை மாநிலமாக உள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது.
கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பு இழந்த பொதுமக்களுக்காக 8 மாதம் ரேசன் கடையில் 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 40 கிலோ அரிசி பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் ரூ.1000 நிவாரண உதவியாக வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு தூணாக இருந்து மக்களை காத்த ஒரே அரசு அம்மாவின் அரசு. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். தை பொங்கலையொட்டி அம்மாவின் அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பணம், சர்க்கரை, அரிசி, திராட்சை, முந்திரி வழங்கியுள்ளது. ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து இந்த அரசு மக்களுக்கு செய்து வருகிறது. சுய உதவி குழுவினருக்கு 80 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் ரூ. 8 ஆயிரம் கோடி தான் கடன் வழங்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது ஒரு கோடியே 7 லட்சம் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் உயர ரூ.80 ஆயிரம் கோடிக்கு மேல் அம்மா அரசு கடன் உதவி வழங்கியுள்ளது.
இந்த அரசு பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு தேசிய விருதுகள் பெற்றுள்ளது. உள்ளாட்சி துறையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட தேசிய விருதுகள் பெற்றுள்ளது. மேலும் உறுப்பு மாற்று சிகிச்சை, நீர்மேலாண்மை, மின்மிகை மாநிலம், கல்வி என பல துறைகளிலும் தேசிய விருது பெற்று தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. தி.மு.க. ஆட்சியில் சரியான நிர்வாக திறமை இல்லாததால் ஒரு விருது கூட பெற முடியவில்லை. சாயப்பட்டறை கழிவு நீர் அமைக்க 26 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு நிதி உதவிக்கு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆறு சுத்தமாக இருக்க பல்வேறு இடங்களில் சுத்திகரிப்பு செய்ய மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பாராளுமன்ற கூட்டத்தில் ஜனாதிபதி உரையில் இடம்பெற்றுள்ளது. நீர் மேலாண்மை, கல்வி உள்பட அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தற்போது 100-க்கு 49 பேர் உயர்கல்வி படித்து வருகிறார்கள். இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகத்தில் தான் அதிகம்பேர் படித்து வருகிறார்கள். இது ஸ்டாலினுக்கு தெரியாது. மக்களை பற்றி சிந்திக்காமல் அவர் கூறுவது அனைத்தும் பொய். பொய்க்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுத்தால் அது பொருத்தமாகும். இரவு, பகல் பாராமல் இந்த அரசு மக்களுக்காக உழைத்து வருகிறது. எனவே வருகிற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
சர்வதேச அளவில் ஒரே நாளில் தங்கம் -வெள்ளி விலை வீழ்ச்சி
22 Oct 2025மும்பை : தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 6.3% சரிந்தது. இதேபோல் ஏற்கெனவே சரிந்து கொண்டிருக்கும் வெள்ளி விலையும் நேற்று 8.7% சரிவை சந்தித்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-10-2025.
22 Oct 2025 -
ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கு மேல் சரிந்த தங்கம் விலை
22 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனையான ந
-
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயல் சின்னம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக கரையை கடக்கும் 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
22 Oct 2025சென்னை, வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறாது என்றும் இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே வடதமிழ்நாடு – புத
-
ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து இந்திய அணி ஒருநாள் தொடரை சமன் செய்யுமா? - அடிலெய்டில் இன்று 2-வது போட்டியில் மோதல்
22 Oct 2025அடிலெய்டு : ஆஸி.,க்கு பதிலடி கொடுத்து இந்திய அணி ஒருநாள் தொடரை சமன் செய்யுமா?
-
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
22 Oct 2025சென்னை : வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு
22 Oct 2025சென்னை : சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
-
காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று புயலாக மாற வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் தகவல்
22 Oct 2025சென்னை, காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாகவோ, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ மாற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அடையாறு, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறப்பு
22 Oct 2025சென்னை : அடையாறு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
-
தங்க நகைகளை வீட்டில் எவ்வளவு வைக்கலாம்..? வெளியானது புதிய தகவல்கள்
22 Oct 2025புதுடெல்லி, வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் வைத்திருக்கலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.
-
கடலூரில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் பலி: அமைச்சர் ஆறுதல்
22 Oct 2025கடலூர் : கடலூர் அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அசோதை. இவர்களது மகள் ஜெயா.
-
குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
22 Oct 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது.
-
பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஜனாதிபதி முர்மு சாமி தரிசனம்
22 Oct 2025திருவனந்தபுரம், 4 நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ள ஜனாதிபதி திரெளபதி முர்மு பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
லோக்பால் உறுப்பினர்களுக்கு ரூ. 5 கோடியில் சொகுசு கார்கள் வாங்க டெண்டர்
22 Oct 2025மும்பை : ஊழலை ஒழிக்கும் லோக்பால் உறுப்பினர்களுக்கு சொகுசு கார் வாங்கி கொடுப்பதா என சரத்பவார் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் திடீர் பரபரப்பு
22 Oct 2025பத்தனம்திட்டா : ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டரின் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு
22 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 2-வது நாளாக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
-
சோனி, எக்கோ ரெக்கார்டிங் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா ஐகோர்ட்டில் மனு
22 Oct 2025சென்னை : சோனி மியூசிக் நிறுவனம், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பிரபல இசையமைப்பாள
-
புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
22 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழையால் புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது.
-
நெல் மூட்டைகள் தேங்க மத்திய அரசே காரணம்: அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
22 Oct 2025தஞ்சாவூர், விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல்
-
கரூர் கூட்டநெரிசல் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உதவ ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்
22 Oct 2025கரூர் : கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உதவ 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
22 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி காவிரி - கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
22 Oct 2025திருச்சி : காவிரி மற்றும் கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
22 Oct 2025சென்னை : அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்காமல் இருக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு: அனைத்து மாவட்டங்களிலும் எச்சரிக்கையாக இருக்கிறோம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
22 Oct 2025சென்னை, பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளனர் என்று தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி, அனைத்து மாவட்டங்கள
-
உங்களது உழைப்பு ஆச்சரியப்படுத்துகிறது: மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி
22 Oct 2025சென்னை : உங்களது உழைப்பும், ஆளுமையும் ஆச்சரியப்படுத்துகிறது என ரஜினி தெரிவித்ததாக மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.


