எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எது தவறு, எது சரி என நீங்களும் சொல்லுங்கள், நானும் சொல்கிறேன், நாட்டு மக்கள் தீர்ப்பு கொடுக்கட்டும். நேருக்கு நேர் வந்து பேசுமாறு ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊத்துக்குளி கூட்டத்தில் சவால் விடுத்து உள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், கோபி உட்பட பல்வேறு பகுதிகளில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து நேற்று மாநகர் மாவட்ட பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக தேர்தல் பிரச்சாரம் செய்தார். முன்னதாக கருங்கல்பாளையம் காவிரி கரையில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன், தங்கமணி, ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.வி. ராமலிங்கம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் வி.பி. சிவசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்களை பார்த்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையை அசைத்தார். பின்னர் பன்னீர்செல்வம் பார்க் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
முன்னதாக ஊழல் குறித்து நேரடி விவாதத்துக்கு தயாரா? என்று மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்திருந்தார். இந்நிலையில் இந்த சவாலை ஏற்றுக் கொண்டதாக கூறிய மு.க. ஸ்டாலின், அதற்கு சில தேவையற்ற நிபந்தனைகளை விதித்துள்ளார். சவாலை ஏற்றுக் கொள்பவர்கள் நேரடியாக விவாதிக்க வேண்டுமே தவிர, நிபந்தனைகளை விதிப்பது விசித்திரமானது. முதல்வர் விடுத்திருந்த சவாலில் இருந்து ஸ்டாலின் ஜகா வாங்கியிருப்பது இதன்மூலம் கண்கூடாக தெரிகிறது. இது பற்றி குறிப்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எது தவறு, எது சரி என நீங்களும் சொல்லுங்கள், நானும் சொல்கிறேன்,நாட்டு மக்கள் தீர்ப்பு கொடுக்கட்டும் நேருக்கு நேர் வந்து பேசுங்கள் என்று ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊத்துக்குளியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பதில் சவால் விடுத்தார்.
ஊழல் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று அழைப்பு விடுத்தேன். ஆனால் ஸ்டாலினோ நீதிமன்றத்தில் இருந்து வழக்கை வாபஸ் வாங்குங்கள் என்று கூறுகிறார். மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் அவர் முடிச்சு போடுகிறார். என்னுடைய ஆட்சியில் மடியில் கனம் ஏதும் இல்லை. எனவே நேரில் வாருங்கள் பேசுவோம் என்று முதல்வர் எடப்பாடி பதில் சவால் விடுத்தார்.
இரவு பகலாக அம்மாவின் அரசு மக்களுக்காக உழைத்து வருகிறது என்றும் மக்களை பற்றி சிந்திக்காமல் பொய் கூறி வரும் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுத்தால் அது பொருத்தமாகும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அம்மா மறைவிற்கு பின் நடைபெறும் முதல் சட்டமன்ற பொதுத்தேர்தல் இதுவாகும், எனக்குப் பின்னால் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும். வாழையடி வாழையாக நின்று நாட்டு மக்களுக்கு பாடுபடும் என்று அம்மா சட்டமன்றத்தில் குறிப்பிட்டார். மறைந்த எம்.ஜி.ஆர்., அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களும் நாட்டுக்காக வாழ்ந்தவர்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு ஸ்டாலின் பொய்ப் பிரசாரம் செய்து அவதூறு பரப்பி வருகிறார். அரசு மீது பழி சுமத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். அவர்கள் அமைச்சர்கள் 13 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நமது அரசு மற்றும் அமைச்சர்கள் மீது வீண்பழி சுமத்தி வருகிறார். அ.தி.மு.க. ஆலமரம் போன்றது. எண்ணற்ற திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. ஈரோடு மாநகரில் ஏராளமான திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அம்மா மினி கிளினிக் 6 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. நாடே போற்றும் இந்த திட்டத்தை ஒருவர் மட்டும் குறை கூறுகிறார். என்ன குறைபாட்டை கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. வேண்டுமென்றால் அம்மா மினிகிளினிக் டாக்டர்களிடம் சோதனை செய்து கொள்ளலாம். 2 ஆயிரம் மினிகிளினிக்குகள் திறந்து இந்த அரசு சாதனை படைத்துள்ளது.
தி.மு.க. ஆட்சியிலும் அ.தி.மு.க. ஆட்சியிலும் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை நீங்கள் (மக்கள்) சிந்தித்து பார்க்க வேண்டும். அ.தி.மு.க.வில் ஒருவர் தவறு செய்தால், அவர் யாராக இருந்தாலும் சட்ட ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் தி.மு.க.வில் அதுபோன்ற நிலை இல்லை. இன்று தமிழகம் சட்டம் ஒழுங்கில் முதன்மை மாநிலமாக உள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது.
கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பு இழந்த பொதுமக்களுக்காக 8 மாதம் ரேசன் கடையில் 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 40 கிலோ அரிசி பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் ரூ.1000 நிவாரண உதவியாக வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு தூணாக இருந்து மக்களை காத்த ஒரே அரசு அம்மாவின் அரசு. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். தை பொங்கலையொட்டி அம்மாவின் அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பணம், சர்க்கரை, அரிசி, திராட்சை, முந்திரி வழங்கியுள்ளது. ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து இந்த அரசு மக்களுக்கு செய்து வருகிறது. சுய உதவி குழுவினருக்கு 80 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் ரூ. 8 ஆயிரம் கோடி தான் கடன் வழங்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது ஒரு கோடியே 7 லட்சம் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் உயர ரூ.80 ஆயிரம் கோடிக்கு மேல் அம்மா அரசு கடன் உதவி வழங்கியுள்ளது.
இந்த அரசு பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு தேசிய விருதுகள் பெற்றுள்ளது. உள்ளாட்சி துறையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட தேசிய விருதுகள் பெற்றுள்ளது. மேலும் உறுப்பு மாற்று சிகிச்சை, நீர்மேலாண்மை, மின்மிகை மாநிலம், கல்வி என பல துறைகளிலும் தேசிய விருது பெற்று தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. தி.மு.க. ஆட்சியில் சரியான நிர்வாக திறமை இல்லாததால் ஒரு விருது கூட பெற முடியவில்லை. சாயப்பட்டறை கழிவு நீர் அமைக்க 26 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு நிதி உதவிக்கு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆறு சுத்தமாக இருக்க பல்வேறு இடங்களில் சுத்திகரிப்பு செய்ய மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பாராளுமன்ற கூட்டத்தில் ஜனாதிபதி உரையில் இடம்பெற்றுள்ளது. நீர் மேலாண்மை, கல்வி உள்பட அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தற்போது 100-க்கு 49 பேர் உயர்கல்வி படித்து வருகிறார்கள். இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகத்தில் தான் அதிகம்பேர் படித்து வருகிறார்கள். இது ஸ்டாலினுக்கு தெரியாது. மக்களை பற்றி சிந்திக்காமல் அவர் கூறுவது அனைத்தும் பொய். பொய்க்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுத்தால் அது பொருத்தமாகும். இரவு, பகல் பாராமல் இந்த அரசு மக்களுக்காக உழைத்து வருகிறது. எனவே வருகிற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை: டெல்லி பயணம் குறித்து இ.பி.எஸ். விளக்கம்
18 Sep 2025சேலம், கூட்டணியை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் நான், பா.ஜ.க.வில் அமித்ஷா கூறுவது தான் இறுதி என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: சூப்பர் 4 சுற்றுக்கு பாக்., தகுதி
18 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 ச
-
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
18 Sep 2025சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
பாகிஸ்தான் கேப்டன், மேனேஜரிடம் மன்னிப்பு கேட்டார் ஐ.சி.சி. நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்
18 Sep 2025அபுதாபி: ஆசியக் கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசியக் கோப்பை ஐ.சி.சி.
-
ஆஸி. மகளிரணி மோசமான சாதனை
18 Sep 2025சண்டீகர்: ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
292 ரன்கள் குவிப்பு...
-
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறிய நீரஜ் சோப்ரா
18 Sep 2025டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்து நீரஜ் சோப்ரா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
இன்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
18 Sep 2025திண்டுக்கல்: பழனி கோவிலில் ரோப்கார் இன்று முதல் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி
18 Sep 2025மே.தீவுகள் அணி அறிவிப்பு
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.
-
இந்தியாவின் ஏற்றுமதி 6 சதவீதம் வரை அதிகரிக்கும்: பியூஷ் கோயல்
18 Sep 2025மும்பை: இந்தியாவின் ஏற்றுமதி 6 சதவீதம் வரை அதிகரிக்கும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.