எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் பீனிக்ஸ் பறவை வடிவில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவை முன்னிட்டு மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் குவிந்தனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.
கடற்கரை முழுவதும் மனித தலைகளாகவே காட்சி அளித்தன. முதலமைச்சர் அழைப்பை ஏற்று அலைஅலையாக குடும்பத்துடன் வந்து மக்களும் தொண்டர்களும் விழாவில் பங்கேற்றனர்.
தமிழக முதல்வராக 6 முறை பதவி வகித்தவர் ஜெயலலிதா. இந்தியாவிலேயே நீண்ட காலம் பதவி வகித்த பெண் முதல்வர்களில் 2-வது நபர் ஆவார்.
29 ஆண்டு காலம் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக இருந்தவர். எம்.ஜி.ஆர். மறைந்த போது 18 லட்சம் உறுப்பினர்களை கொண்ட அ.தி.மு.க. இயக்கத்தை 1½ கோடி தொண்டர்கள் உள்ள இயக்கமாக மாற்றி காட்டியவர். தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர். சர்ச் பார்க் கான்வென்ட்டில் படித்த போது படிப்பு, விளையாட்டு போட்டிகளில் முதலிடம் வகித்தார். ஆங்கிலம் உள்பட ஏழு மொழிகளில் சரளமாக பேச தெரிந்தவர். சினிமாவிலும் வெற்றி கொடி நாட்டியவர், இரும்பு பெண்மணி. எடுத்த காரியத்தை முடித்து காட்டும் துணிச்சல் பெண்மணி. ‘அம்மா’ என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்.
1948–ம் ஆண்டு பிப்ரவரி 24 –ந் தேதி ஜெயலலிதா பிறந்தார். 2 வயதிலேயே தந்தையை இழந்தவர். 15 வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கினார்.
ஆட்சியில் இருந்த கட்சி தொடர்ந்து மீண்டும் ஆட்சி செய்யும் நிலையை 32 ஆண்டுகளுக்குப் பின் ஏற்படுத்தியவர். மாநில கட்சி ஒன்று நாடாளுமன்றத்தில் 3–வது பெரிய கட்சியாக இடம் பெறும் நிலையையும் உருவாக்கியவர். உலகம் போற்றும் சாதனைகளை செய்தவர். எத்தனை முறை வீழ்ந்தாலும் மீண்டும் அந்த தடை, சோதனைகளை தாண்டி வெற்றி கண்டவர்.
2016–ம் ஆண்டு டிசம்பர் 5–ந் தேதி ஜெயலலிதா காலமானார். அவரது உடல் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
அந்த இடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவில் மிக பிரமாண்டமாக அனைவரையும் கவரும் வகையில் அதிசயிக்கத்தக்க வகையில் ரூ.80 கோடியில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவும் அமைக்கப்பட்டிருக்கிறது. உலகத் தரத்தில் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு இது உருவாக்கப்பட்டிருக்கிறது.
பொதுப்பணித்துறை சார்பில் இந்த நினைவிடம் கட்டப்பட்டது. சுமார் 2 ஆண்டு காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த நினைவிடத்தை நேற்று காலை 11 மணி அளவில் திறந்து வைத்தார். முதலில் நினைவிட கல்வெட்டை திறந்து வைத்தார்.
அதன் பின்பு நினைவிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது அங்கு குவிந்திருந்த நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ‘புரட்சி தலைவி அம்மா புகழ் ஓங்குக’ என்று குரல் எழுப்பினார்கள். கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
நினைவிடத்தை திறந்து வைத்து ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் மலர் வளையம் வைத்து வணங்கினார்கள். அங்கு ஜெயலலிதாவின் ஆள் உயர பிரமாண்ட படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த படத்தை அனைவரும் தொட்டு வணங்கினார்கள். அங்கு அணையா விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. அதனை வணங்கினார்கள். நினைவிடத்தில் மலர் தூவி கீழே விழுந்து வணங்கினார்கள்.
இதனை தொடர்ந்து தலைமை செயலாளர் க.சண்முகம், அவைத்தலைவர் மதுசூதனன், அனைத்து அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என அனைவரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி வணங்கி மரியாதை செலுத்தினார்கள்.
அங்கிருந்து நேராக அருகில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு வந்தனர். அங்கு எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் 11.22 மணி அளவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், சபாநாயகர் ஆகியோர் மலர் வளையம் வைத்து வணங்கினார்கள். தொடர்ந்து அவைத்தலைவர் இ.மதுசூதனன், அமைச்சர்கள், நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
எம்.ஜி.ஆர். நினைவிட வளாக நுழைவுவாயில் அருகே சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு முதலமைச்சரும், மற்றவர்களும் நடந்தே வந்தனர்.
பின்னர் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவிட கல்வெட்டை முதல்வர் திறந்து வைத்தார்.
பின்னர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
எதிரிகளை வென்று வெற்றிக்கனியை சமர்ப்பிக்க எங்களுக்கு அருள்தாருங்கள் அம்மா என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
இதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அவர் பேசும்போது, ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லி புகழாரம் சூட்டினார்.
அனைவருக்கும் ‘ரோல் மாடலாக’ அம்மா திகழ்ந்தார். நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அம்மாவின் ஆட்சி அமைவதே அம்மாவுக்கு நாம் செலுத்தும் நன்றி கடன் என்று முதலமைச்சர் கூறினார்.
இரவு பகல் பாராது அம்மாவின் சாதனைகள், ஆட்சியின் சாதனைகளை சொல்லி அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றுவோம். வெற்றி காண்போம் என்றும் கூறினார்.
இறுதியாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் மகேசன் காசிராஜன் நன்றி கூறினார்.
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா நிகழ்ச்சிகள் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு அனைவரும் குடும்பத்தோடு வரவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று தமிழகம் முழுவதும் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் தொண்டர்களும், பொதுமக்களும் லட்சக்கணக்கில் குவிந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சர்ச்சை கேள்விகள் தவிர்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
12 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வு வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மராத்திய ராணுவ தளங்கள் : மத்திய அமைச்சர் அமித்ஷா புகழாரம்
12 Jul 2025மும்பை : யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மராத்திய ராணுவ தளங்கள் இடம்பெற்றுள்ளதற்கு அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்பதில் ஆயிரம் சதவீதம் உறுதி: த.வெ.க. திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் 100 சதவீதம் அல்ல 1000 சதவீதம் உறுதியாக உள்ளோம் என்று த.வெ.க. தெரிவித்துள்ளது.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள்: தமிழக அரசு அறிவுறுத்தல்
12 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
லாக் அப் மரணங்கள்: விஜய் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்
12 Jul 2025சென்னை, லாக் அப் மரணங்கள் தொடர்பாக, சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் த.வெ.க. தலைவர் விஜயின் தலைமையில் நடைபெற உள்ளது.
-
பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்: இ.பி.எஸ். உறுதி
12 Jul 2025சென்னை : ''வரும் சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை உடன் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
-
தனியார் பால் நிறுவன மேலாளர் மரணம் தற்கொலையே: சென்னை காவல் ஆணையர்
12 Jul 2025சென்னை : தனியார் பால் நிறுவனத்தில் கருவூல மேலாளர் மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது என சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
-
யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Jul 2025சென்னை : செஞ்சி கோட்டை தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
10 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி.
12 Jul 2025சென்னை, காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பிரபாகர் கூறி உள்ளார்.