எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் பீனிக்ஸ் பறவை வடிவில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவை முன்னிட்டு மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் குவிந்தனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.
கடற்கரை முழுவதும் மனித தலைகளாகவே காட்சி அளித்தன. முதலமைச்சர் அழைப்பை ஏற்று அலைஅலையாக குடும்பத்துடன் வந்து மக்களும் தொண்டர்களும் விழாவில் பங்கேற்றனர்.
தமிழக முதல்வராக 6 முறை பதவி வகித்தவர் ஜெயலலிதா. இந்தியாவிலேயே நீண்ட காலம் பதவி வகித்த பெண் முதல்வர்களில் 2-வது நபர் ஆவார்.
29 ஆண்டு காலம் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக இருந்தவர். எம்.ஜி.ஆர். மறைந்த போது 18 லட்சம் உறுப்பினர்களை கொண்ட அ.தி.மு.க. இயக்கத்தை 1½ கோடி தொண்டர்கள் உள்ள இயக்கமாக மாற்றி காட்டியவர். தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர். சர்ச் பார்க் கான்வென்ட்டில் படித்த போது படிப்பு, விளையாட்டு போட்டிகளில் முதலிடம் வகித்தார். ஆங்கிலம் உள்பட ஏழு மொழிகளில் சரளமாக பேச தெரிந்தவர். சினிமாவிலும் வெற்றி கொடி நாட்டியவர், இரும்பு பெண்மணி. எடுத்த காரியத்தை முடித்து காட்டும் துணிச்சல் பெண்மணி. ‘அம்மா’ என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்.
1948–ம் ஆண்டு பிப்ரவரி 24 –ந் தேதி ஜெயலலிதா பிறந்தார். 2 வயதிலேயே தந்தையை இழந்தவர். 15 வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கினார்.
ஆட்சியில் இருந்த கட்சி தொடர்ந்து மீண்டும் ஆட்சி செய்யும் நிலையை 32 ஆண்டுகளுக்குப் பின் ஏற்படுத்தியவர். மாநில கட்சி ஒன்று நாடாளுமன்றத்தில் 3–வது பெரிய கட்சியாக இடம் பெறும் நிலையையும் உருவாக்கியவர். உலகம் போற்றும் சாதனைகளை செய்தவர். எத்தனை முறை வீழ்ந்தாலும் மீண்டும் அந்த தடை, சோதனைகளை தாண்டி வெற்றி கண்டவர்.
2016–ம் ஆண்டு டிசம்பர் 5–ந் தேதி ஜெயலலிதா காலமானார். அவரது உடல் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
அந்த இடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவில் மிக பிரமாண்டமாக அனைவரையும் கவரும் வகையில் அதிசயிக்கத்தக்க வகையில் ரூ.80 கோடியில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவும் அமைக்கப்பட்டிருக்கிறது. உலகத் தரத்தில் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு இது உருவாக்கப்பட்டிருக்கிறது.
பொதுப்பணித்துறை சார்பில் இந்த நினைவிடம் கட்டப்பட்டது. சுமார் 2 ஆண்டு காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த நினைவிடத்தை நேற்று காலை 11 மணி அளவில் திறந்து வைத்தார். முதலில் நினைவிட கல்வெட்டை திறந்து வைத்தார்.
அதன் பின்பு நினைவிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது அங்கு குவிந்திருந்த நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ‘புரட்சி தலைவி அம்மா புகழ் ஓங்குக’ என்று குரல் எழுப்பினார்கள். கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
நினைவிடத்தை திறந்து வைத்து ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் மலர் வளையம் வைத்து வணங்கினார்கள். அங்கு ஜெயலலிதாவின் ஆள் உயர பிரமாண்ட படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த படத்தை அனைவரும் தொட்டு வணங்கினார்கள். அங்கு அணையா விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. அதனை வணங்கினார்கள். நினைவிடத்தில் மலர் தூவி கீழே விழுந்து வணங்கினார்கள்.
இதனை தொடர்ந்து தலைமை செயலாளர் க.சண்முகம், அவைத்தலைவர் மதுசூதனன், அனைத்து அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என அனைவரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி வணங்கி மரியாதை செலுத்தினார்கள்.
அங்கிருந்து நேராக அருகில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு வந்தனர். அங்கு எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் 11.22 மணி அளவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், சபாநாயகர் ஆகியோர் மலர் வளையம் வைத்து வணங்கினார்கள். தொடர்ந்து அவைத்தலைவர் இ.மதுசூதனன், அமைச்சர்கள், நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
எம்.ஜி.ஆர். நினைவிட வளாக நுழைவுவாயில் அருகே சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு முதலமைச்சரும், மற்றவர்களும் நடந்தே வந்தனர்.
பின்னர் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவிட கல்வெட்டை முதல்வர் திறந்து வைத்தார்.
பின்னர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
எதிரிகளை வென்று வெற்றிக்கனியை சமர்ப்பிக்க எங்களுக்கு அருள்தாருங்கள் அம்மா என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
இதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அவர் பேசும்போது, ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லி புகழாரம் சூட்டினார்.
அனைவருக்கும் ‘ரோல் மாடலாக’ அம்மா திகழ்ந்தார். நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அம்மாவின் ஆட்சி அமைவதே அம்மாவுக்கு நாம் செலுத்தும் நன்றி கடன் என்று முதலமைச்சர் கூறினார்.
இரவு பகல் பாராது அம்மாவின் சாதனைகள், ஆட்சியின் சாதனைகளை சொல்லி அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றுவோம். வெற்றி காண்போம் என்றும் கூறினார்.
இறுதியாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் மகேசன் காசிராஜன் நன்றி கூறினார்.
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா நிகழ்ச்சிகள் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு அனைவரும் குடும்பத்தோடு வரவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று தமிழகம் முழுவதும் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் தொண்டர்களும், பொதுமக்களும் லட்சக்கணக்கில் குவிந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் - 4 பேர் பலி
26 Oct 2025கீவ் : உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 340வது நாளாக போர் நீடித்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.
-
கேரளாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி
26 Oct 2025திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கி மாவட்டம் அடிமலி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
-
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி
26 Oct 2025தென்காசி : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக் கொடுக்கிறது : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
26 Oct 2025நெல்லை : ஒவ்வொரு முறையும் கேட்கும் நிவாரணத்தை கொடுக்காமல் மத்திய அரசு கிள்ளிக் கொடுக்கிறது என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-10-2025.
26 Oct 2025 -
அமெரிக்க் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்
26 Oct 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
-
8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல்
26 Oct 2025சென்னை : 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல், சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கு திசையில் 790 கி.மீ தூரத்தில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி
26 Oct 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் கேளிக்கை நிகழ்ச்சியில் நடந்த சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
நேரடியாக போர் தொடுப்போம்: ஆப்கானுக்கு பாக். பகிரங்க எச்சரிக்கை
26 Oct 2025லாகூர் : ஆப்கானிஸ்தானுடன் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பாகிஸ்தான் வெளிப்படையான போரை தொடங்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச
-
ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சி சம்பவம்: ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.
26 Oct 2025ராஞ்சி : ஜார்க்கண்ட்டில் ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.
-
சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு
26 Oct 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் சந்திக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்
26 Oct 2025கரூர் : கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்கிறார்.
-
கந்தசஷ்டி சூரசம்ஹார விழா; திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
26 Oct 2025திருச்செந்தூர் : கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி நெல்லை மற்றும் தாம்பரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 30 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
26 Oct 2025மேட்டூர் : மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
-
'பைசன்' படக்குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு : இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி
26 Oct 2025சென்னை : மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
-
தமிழ்நாடு விளையாட்டுத்துறை திறமையானவர்களுக்கு என்றென்றும் பக்கபலமாக இருக்கும்: துணை முதல்வர்
26 Oct 2025சென்னை : திறமையாளர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை என்றென்றும் பக்கபலமாக இருக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
26 Oct 2025வாஷிங்டன் : கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
-
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா: தங்க தேரில் சுவாமி வீதிஉலா
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று தங்க தேரில் சுவாமி வீதிஉலா நடந்தது.ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம
-
ஆசியான் உச்சி மாநாடு: மலேசியாவில் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு
26 Oct 2025கோலாலம்பூர் : ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க மலேசியா சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
பாக்.குடன் அமெரிக்காவின் நெருக்கம் இந்தியாவுடனான நட்பை பாதிக்காது : மார்கோ ரூபியோ விளக்கம்
26 Oct 2025நியூயார்க் : பாகிஸ்தானுடன் அமெரிக்கா காட்டும் நெருக்கம் இந்தியாவுடனான உறவுகளை பாதிக்காது என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
-
டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
26 Oct 2025புதுடெல்லி : டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை நடைபெறுகிறது.
-
போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 93 பேர் பலி
26 Oct 2025டெல்அவீவ் : அக்டோபர் 10-ம் தேதி காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் 93 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதர அமைச்சகம் த
-
கணவனுக்கு கத்திக்குத்து: இந்திய வம்சாவளி ஆசிரியை கைது
26 Oct 2025நியூயார்க் : அமெரிக்காவில் வீட்டை சுத்தம் செய்யாததற்காக கணவரின் கழுத்தில் கத்தியால் குத்தியதாக இந்திய வம்சாவளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: தேஜஸ்வி வாக்குறுதி
26 Oct 2025பாட்னா : பீகாரில் இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர 20 நாட்களில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்


