முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் ஒரே மருத்துவமனையில் பணிபுரியும் 37 டாக்டர்களுக்கு கொரோனா

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் 37 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் வைரஸ் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதற்கிடையில், வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள் என பல தரப்பினருக்கும் தொற்று பரவி வருகிறது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர்கள் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்ட டாக்டர்களில் 32 பேர் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

எஞ்சிய 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கங்காராம் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் 37 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அம்மருத்துவமனை தலைவர் ராணாவுடன் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று ஆலோசனை நடத்தினார். கொரோனா உறுதி செய்யப்பட்ட டாக்டர்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் ஏற்கனவே செலுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து