முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா மீது இணையவழி தாக்குதல் நடத்தும் திறன் சீனாவுக்கு உள்ளது: முப்படைத் தளபதி எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

இந்தியா, சீனா இடையே இணையவழி துறையில் மிகப் பெரிய வித்தியாசம் நிலவுகிறது. சைபர் தாக்குதல்களை நடத்த சீனாவிற்கு திறன் உள்ளது என இந்திய முப்படைத் தளபதி பிபின் ராவத் கூறினார்.

டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டு இந்திய முப்படைத் தளபதி பிபின் ராவத் பேசும் போது கூறியதாவது:- 

இந்தியா, சீனா இடையே இணையவழி துறையில் மிகப் பெரிய வித்தியாசம் நிலவுகிறது. புதிய தொழில்நுட்பங்கள் மீது அதிக நிதியை சீனாவால் முதலீடு செய்ய முடிகிறது.  தொழில் நுட்பத்தில் இந்தியாவை சீனா முந்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே தொழில்நுட்பத்தில் திறன் சார்ந்த இடைவெளி நிலவுகிறது.  இந்தியா மீது இணையவழி தாக்குதல் நடத்தும் திறன் சீனாவுக்கு உள்ளது. அவ்வாறு இணையவழி தாக்குதல் நடத்தப்பட்டால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். இணையவழி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அமைப்பை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இணையவழி தாக்குதல் பிரச்சினை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அந்தத் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான தடுப்பு அரண்களை உருவாக்குவதே நோக்கமாக உள்ளது.  புதிய தொழில்நுட்பங்களை ஈடுபடுத்துவதில் ராணுவம், விமானப் படையுடன் ஒப்பிடுகையில் கடற்படை முன்னிலை வகிக்கிறது.  பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அச்சுறுத்தல்களையும் சவால்களையும் இந்தியா எதிர்கொண்டுள்ளது. நட்பு நாடுகள் பாதிக்கப்படாத வகையில் அந்த சவால்களைத் திறம்பட சமாளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் நிலவும் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்வதற்கான சிறந்த தலைமைப் பண்பை இந்திய அரசு வெளிப்படுத்தி வருகிறது.  பாதுகாப்பு தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு மேற்கத்திய நாடுகளைச் சார்ந்திருப்பதை இந்தியா குறைத்து கொள்ள வேண்டும். அந்த விவகாரங்களை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பாக மற்ற நாடுகள் இந்தியாவிடம் இருந்து பாடம் கற்கும் அளவுக்கு சர்வதேச அளவில் தலைமை பெற வேண்டும்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறி ராணுவம், விமானம் மற்றும் கடற்படை தலைமை தளபதிகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினர். எதிர்காலத்தில் ஏற்படும் பாதுகாப்பு சவால்களை நாடு எதிர்கொள்வதற்கு முப்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து