முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோழிக்கோட்டில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்

வெள்ளிக்கிழமை, 9 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

விமான சரக்கு பெட்டக பகுதியில் தீப்பிடித்ததை குறிக்கும் வகையில் எச்சரிக்கை அலாரம் ஒலித்ததை தொடர்ந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து நேற்று காலை குவைத்துக்கு எர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானத்தில் சரக்கு பெட்டக பகுதியில் தீப்பிடித்ததை குறிக்கும் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதனையடுத்து விமானிகள் விமானத்தை கோழிக்கோட்டுக்கு திருப்பினர். 

கோழிக்கோடு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. அனுமதி கிடைத்ததும், விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட விமானத்தில் 17 பயணிகள் இருந்தனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து