முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிரா தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: பிரதமர் மோடி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 23 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

மராட்டிய மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்டிரத்தின் பால்கர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டரில்,  மராட்டிய  மாநிலம் பல்கார் மாவட்டம் விரார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென தீ விபத்தில் ஏற்பட்டது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.  இந்த விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவாகக் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

 அதேபோல், பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும்,  தீ விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், மத்திய அமைச்சர்கள் ஹர்ஷவர்தன், ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி ஆகியோரும் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து