முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பூசி விலையை குறைக்க உத்தரவிட வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

திங்கட்கிழமை, 26 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா தடுப்பூசி விலையைக் குறைக்க உத்தரவிட வேண்டும் என்றும், தடுப்பூசியின் விலை உயர்வு நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது.,

மத்திய அரசே கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

ஏற்கெனவே மத்திய அரசை விட மாநில அரசுகள் குறைவான நிதி ஆதாரங்களைக் கொண்டிருக்கும்போது இது அநீதியானது. 2021-22-ம் ஆண்டுக்கான கொரோனா தடுப்பூசி திட்டத்துக்காக 35,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும்போது, கொரோனா தடுப்பூசி மூன்றாவது கட்டத்துக்கு தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் என்று எதிர்பார்ப்பது இயல்பானது.

இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தில்  18-45 வயதுக்குட்பட்ட அனைவருக்குமான தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிகளையும் ஆராய வேண்டும் எனவும் கொரோனா தடுப்பூசியின் விலை உயர்வு மாநிலங்களுக்கு மேலும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி மையங்களை அதிகரிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுத்தி உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி இதனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து