முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய விமானங்களுக்கு மே 15 வரை தடை- ஆஸ்திரேலியா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 27 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 3 லட்சத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.  

இதன் காரணமாக இங்கிலாந்து, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா, ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் இந்திய விமானங்கள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்கு தடை விதித்துள்ளன.  அந்த வரிசையில் தற்போது ஆஸ்திரேலியாவும் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்திய விமானங்கள் ஆஸ்திரேலியா வர மே 15 வரை தடை விதித்து பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து