முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னி நட்சத்திரத்தில் வெப்பத்தின் தாக்கம் 110 டிகிரி வரை அதிகரிக்கும் : இந்திய வானிலை மையம் தகவல்

புதன்கிழமை, 28 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மே 4-ம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திர காலத்தில், வெப்பம் 110 டிகிரி வரை உயரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை என்பது மார்ச், ஏப்ரல் மாதங்களில் தொடங்கி, சுமார் ஆறு மாத காலம் வெயில் இருக்கும். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கோடைக்கால முன்னறிவிப்பு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறி இருப்பதாவது:–

மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு மாநிலங்களில் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும். கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவின் மேற்கு பகுதிகளில் இயல்பைவிட வெயில் அதிகமாக இருக்கும்.

சத்தீஸ்கர், ஒடிசா, குஜராத், மகராஷ்டிரா, கோவா மற்றும் ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும்.

தென்மாநிலங்களைப் பொறுத்தவரையில் தென்மாநிலங்கள் மற்றும் அதன் மத்திய பகுதிகளில் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை குறைவாக இருக்கும். தென் மாநிலங்களில் இரவு நேர குறைந்தபட்ச வெப்ப நிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மே 4-ம் தேதி கத்தரி வெயில் என்னும் அக்னி நட்சத்திர காலம் தொடங்க உள்ளது. இது 25 நாட்கள் நீடிக்கும். அந்தக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து, இயல்பை விட கூடுதலாக வெயில் சுட்டெரிக்கும். அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெயில் தகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து