முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதித்தவர்களுக்கு 28 நாள் விடுப்புடன் ஊதியம் : தனியார் நிறுவனங்களுக்கு உ.பி. முதல்வர் மறு உத்தரவு

புதன்கிழமை, 28 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ : உத்தரபிரதேசத்தில் கடந்த வருடம் மார்ச்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஓர் உத்தரவிட்டிருந்தது. அதில், கொரோனா வைரஸ் தொற்றால் தனியார் நிறுவன ஊழியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு 28 நாட்கள் விடுப்புடன் ஊதியமும் அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதைபெரும்பாலானோர் பின்பற்றவில்லை என புகார்கள் வந்தன.

இந்நிலையில், கொரோனாவின் இரண்டாவது அலையால் கடந்த வருடத்தை விட அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, அதே விதிமுறைகளை தனியாருக்காக மீண்டும் ஒரு உத்தரவாக பிறப்பித்துள்ளது. இதில் கொரோனா தொற்று கொண்ட பணியாளர்களுக்கு 28 நாட்களுக்கான விடுப்புடன் ஊதியமும் அளிக்க வேண்டும் என மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த உத்தரவு தொடர்பாக உத்தரபிரதேச அரசின் தொழிலாளர் துறையின் கூடுதல் செயலாளரான சுரேஷ் சந்திரா கூறும்போது,

கடந்த வருடம் மார்ச் 20-ல் அரசுபிறப்பித்த உத்தரவை அனைத்து கலெக்டர்கள் மற்றும் தொழிலாளர் துறையின் ஆணையர்கள் தீவிரமாக அமலாக்க வேண்டும். இதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான மருத்துவச் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். கொரோனாவிற்காக தற்காலிகமாக மூடப்படும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கடை களும் தனது ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து