முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடின்றி டெல்லி குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு

சனிக்கிழமை, 1 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லி குருத்வாராவில் குரு தேஜ் பகதூரின் 400-வது பிறந்த தினத்தில் பிரதமர் மோடி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி சென்று வழிபட்டார்.

சீக்கிய மத குருக்களில் ஒருவரான குரு தேஜ் பகதூரின் 400-வது பிறந்த தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.   முகலாய பேரரசர் அவுரங்கசீப் ஆட்சியில் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்ட அவரது பிறந்த தினத்தில் சீக்கியர்கள் பல்வேறு பகுதிகளிலும் வழிபாடு நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், டெல்லியில் அமைந்துள்ள சிஸ் கஞ்ச் சாஹிப் குருத்வாராவில் பிரதமர் மோடி நேற்று காலை வருகை தந்தார். அவரை குருத்வாரா நிர்வாகிகள் வரவேற்று சிறப்பித்தனர். 

இதன் பின்னர் பிரதமர் மோடி, தேஜ் பகதூரின் 400-வது பிறந்த தினத்தினை முன்னிட்டு குருத்வாராவில் வழிபாடு மேற்கொண்டார்.  பிரதமரின் வருகையை முன்னிட்டு அவர் செல்லும் வழியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.  இதே போன்று பிரதமருக்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து