எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுச்சேரி : யோகா, இயற்கை மருத்துவ முறைகளை கொரோனா தடுப்பு முறைகளாக பயன்படுத்தலாம் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைளில் அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தொழில் நிறுவனங்கள் தாராள மனதோடு அரசுக்கு உதவிகள் வழங்க வேண்டும் என்று அரசு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் முகக்கவசம், கிருமிநாசினி, வென்டிலேட்டர், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றைச் சுகாதாரத் துறைக்கு வழங்கி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நேற்று புதுச்சேரி ராஜ்நிவாஸில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில், விழுப்புரம் தனியார் கல்விக் குழுமம் 10,000 கிருமிநாசினி புட்டிகளை சுகாதாரத் துறைக்கு வழங்கியது. மேலும், புதுச்சேரி சித்தா, யுனானி, ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத மருந்து தயாரிப்பாளர்கள் சங்கம் ரூ. 50,000 மதிப்பிலான 25 கிலோ கபசுரக் குடிநீர் சூரணம், 36 லிட்டர் கிருமிநாசினி, 25 அடைப்புகள் கபசுரக் குடிநீர் கசாயம் வழங்கியது. சுகாதாரத் துறைச் செயலர் அருண அவற்றைப் பெற்றுக் கொண்டார். பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அரசுக்கு உதவ முன்வந்த நிறுவனங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோல மேலும் நிறுவனங்கள் உதவி செய்ய முன்வர வேண்டும். புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. மருத்துவக் குழுக்கள் வீடு வீடாக சென்று சிகிச்சை அளிப்பது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கான கட்டணம் ரூ. 500 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. தனியார் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் ஆயுஷ் நிறுவனம் கொரோனா பாதிப்பைத் தடுக்க இயற்கை மருந்துகளைப் பரிந்துரை செய்து வருகிறது.
அரசு மூலமாக ஒப்புதல் அளித்து மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கவும், சில இயற்கை மருத்துவர்கள், இந்திய மருத்துவ முறையைத் தனியாக மருத்துவமனை அமைத்து கொரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஒன்றிரண்டு மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் யோகா, இயற்கை மருத்துவ முறைகளை கொரோனா தடுப்பு முறைகளாகப் பயன்படுத்தலாம். ரெம்டெசிவிர் மருந்து எல்லோருக்கும் தேவைப்படாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ரெம்டெசிவிர் மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம். மருத்துவர்களும், தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும்.
பொதுமக்களின் விழிப்புணர்வு, கட்டுப்பாடுகளால் மட்டுமே கொரோனா பரவலைத் தடுக்க முடியும். கொரோனா ஒரு தொற்று, அந்த தொற்று பரவாமல் இருக்க நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது ஒவ்வொருவரின் மனதிலும் இருக்க வேண்டும். ரெம்டெசிவிர், மருந்துகள், ஆக்ஸிஜன் ஆகியவை போதிய அளவு இருப்பு இருக்கிறது. ஆகவே, அரசுடன் மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரு பவுன் 92,640-க்கும் விற்பனை
13 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-10-2025.
13 Oct 2025 -
தீபாவளிக்கு வெளியாகும் பைசன்
13 Oct 2025அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன்.
-
மருதம் திரை விமர்சனம்
13 Oct 2025ராணிப்பேட்டை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் விதார்த், மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விதா
-
தேசிய தலைவர் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி
13 Oct 2025எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜெனிபெர் மார்கிரட் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘தேசிய தலைவர்.
-
இளையராஜா இசையில் உருவாகும் மைலாஞ்சி
13 Oct 2025அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் படம் மைலாஞ்சி.
-
வில் (உயில்) திரை விமர்சனம்
13 Oct 2025தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு ஒரு வீட்டை அலக்கியா பெயரில் எழுதி வைத்து விட்டு பின் இறந்து விடுகிறார்.
-
தமிழகத்தில் 19-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு : இன்று 4 மாவட்டங்களில் கனமழை
13 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்.19-ம் தேதி வரை 6 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று கோவை, நீ
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: வரும் 17-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும்
13 Oct 2025சென்னை, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்
-
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தமிழ்நாடு அரசாணை வெளியீடு
13 Oct 2025சென்னை, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு : ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் குழு அமைப்பு
13 Oct 2025புதுடெல்லி : கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள்; ரூ.190 கோடியில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள், ரூ.190 கோடி செலவில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்ற
-
ஆய்வு செய்யாமல் உத்தரவிடுவதா..? கரூர் கூட்டநெரிசல் வழக்கில் ஐகோர்ட் நீதிபதிக்கு கண்டனம்
13 Oct 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்த விதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
மதுரவாயலில் 1,600 பேருக்கு புதிய வீட்டுமனை பட்டாக்கள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
13 Oct 2025சென்னை, சென்னை, மதுரவாயில் பகுதியில் 1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 92 கோடி ரூபாய் மதிப்பில் புதிய, முடிவுற்ற பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.92 கோடி மதிப்பிலான 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
எடுத்துக்காட்டான காந்திய வாழ்வு: நூற்றாண்டு காணும் லட்சுமி காந்தனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
13 Oct 2025சென்னை, லட்சுமி காந்தன் பாரதியின் வாழ்க்கையை, இன்றைய தலைமுறை தனக்கான பாடமாகக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது: இஸ்ரேல் ராணுவம்
13 Oct 2025டெல் அவிவ், உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.