முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க கூடிய மதுபான விற்பனையை தொடர்வது ஏன்? - ஐகோர்ட் கிளை கேள்வி

புதன்கிழமை, 5 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கச் செய்யும் மதுபானங்கள் விற்பனையை தொடர்வது ஏன் என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்  கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், கோயில்கள் மூடப்பட்டுள்ளன. கூட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், மதுபான கடைகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால், கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி அமர்வில் நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கச் செய்யும் மதுபானங்கள் விற்கப்படுவதை அனுமதிப்பது ஏன் என, கேள்வி எழுப்பினர். பின்னர், மனு தொடர்பாக மத்திய, மாநில உள்துறை செயலாளர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 4-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து