எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் இன்று பதவி ஏற்கிறார். இதற்கான விழா, கவர்னர் மாளிகையில் எளிமையான முறையில் நடத்தப்படுகிறது.
2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. மொத்தம் 159 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி, 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி கட்டிலில் அமர இருக்கிறது. முன்னதாக நடந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஸ்டாலினை சட்டமன்ற தி.மு.க. தலைவராக அனைவரும் ஒரு மனதாக தேர்வு செய்தனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டதற்கான தீர்மான கடிதத்தில் 133 எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்திட்டனர்.
அதை தொடர்ந்து, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் வழங்க நேற்று முன்தினம் காலை 10.25 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு ஸ்டாலின் சென்றார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் உடன் சென்றனர். கவர்னரை சந்தித்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அவருக்கு பொன்னாடை போர்த்தியதோடு, பூங்கொத்தும் கொடுத்தார். அப்போது அவரிடம், ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்கள் அளித்த ஆதரவு தீர்மானக் கடிதத்தையும் வழங்கி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதனைத் தொடர்ந்து கவர்னரும், ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தியும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர், கவர்னரிடம் ஸ்டாலின் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நீடித்தது.
இதற்கிடையே ஆட்சி அமைப்பதற்கு கவர்னர் பன்வாரிலால் அழைப்பு விடுத்தார். கவர்னரின் செயலாளர் ஆனந்தராவ் பட்டீல் அதற்கான கடிதத்தை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்தார். அதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவைக்கான பட்டியல், கவர்னரின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. இந்தப் பட்டியல் தலைமைச் செயலாளர் மூலம் பொதுத்துறைக்கு அனுப்பப்படும். பொதுத்துறை மூலம் முதல்வர் மற்றும் ஒவ்வொரு அமைச்சருக்கும் அரசுத் தரப்பில் இருந்து தரப்பட வேண்டிய கார், தனிப் பாதுகாவலர் (பி.எஸ்.ஓ.), தலைமைச் செயலகத்தில் அலுவலக அறை ஆகியவை ஏற்பாடு செய்யப்படும்.
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இதை எளிமையாக நடத்துவதாக ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். அதன்படி, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தரப்பில் இருந்து உறவினர்கள் உள்பட 200 பேர் மட்டுமே அந்த விழாவில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழ்நாடு அமைச்சரவை பதவி ஏற்பு விழாவிற்கான அழைப்பிதழை தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வழங்கியுள்ளார். சில எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் விழாவுக்கான அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் உள்ள திறந்த வெளியில் அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக அனைவரும் காலை 8.30 மணிக்கே வந்து விட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சரவைக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் ஆகியவற்றை செய்து வைக்கும்படி கவர்னர் பன்வாரிலால் புரோகித்திற்கு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அழைப்பு விடுப்பார்.
அதைத் தொடர்ந்து ஒவ்வொரு அமைச்சராக பெயர் சொல்லி மேடைக்கு கவர்னர் அழைப்பார். முதலில் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்படும். அவர் மேடைக்கு வந்ததும், கவர்னர் தொடங்கும் வாசகத்தை அப்படியே அவர் படிப்பார். அதன்படி, மு.க.ஸ்டாலின் அந்த பிரமாணத்தை படித்து முடிப்பார். அதைத் தொடர்ந்து ரகசிய காப்புப் பிரமாணமும் அதே வகையில் செய்து வைக்கப்படும்.
அதைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அமைச்சரவையில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ள அமைச்சர் அழைக்கப்படுவார். அந்த வகையில் ஒவ்வொரு அமைச்சராக வரிசையாக மேடைக்கு வந்து 2 உறுதி மொழி பிரமாணங்களை வாசித்து பதவி ஏற்பார்கள். அதைத் தொடர்ந்து அங்குள்ள கோப்பில் கையெழுத்திடுவார்கள். இந்த பதவியேற்பு நிகழ்வில் 30-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவி பிரமாணம் எடுத்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.
அதன் பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித், அனைவருக்கும் தேநீர் விருந்தளிப்பார். அதில் பங்கேற்று விட்டு, முதல்வர் மற்றும் அமைச்சர்களாக அனைவரும், அவர்களுக்கென்று அளிக்கப்பட்ட கார் மற்றும் பாதுகாவலர்களுடன் தலைமை செயலகத்திற்கு செல்வார்கள். தலைமைச் செயலகத்தில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் மு.க.ஸ்டாலின் நேரடியாக அந்த அறைகளுக்குச் சென்று அமைச்சர்களை பொன்னாடை போர்த்தி வாழ்த்தி இருக்கையில் அமர செய்வார். முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஸ்டாலின் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-11-2025.
21 Nov 2025 -
துபாயில் விமான கண்காட்சியின்போது இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விழுந்து விபத்து: விமானி உயிரிழப்பு
21 Nov 2025துபாய் : துபாயில் விமான கண்காட்சியின்போது இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறியதில் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெ
-
போலீஸ் அனுமதி மறுப்பு எதிரொலி: விஜய் பொதுக்கூட்டத்தை வேறு ஒரு நாளில் நடத்த த.வெ.க. முடிவு
21 Nov 2025சேலம், விஜய் பொதுக்கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வேறு ஒரு நாளில் பொதுக்கூட்டம் நடத்த த.வெ.க.வினர் முடிவு செய்துள்ளனர்.
-
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
21 Nov 2025சென்னை : கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தில் மாநில அரசிடம்தான் குளறுபடி உள்ளது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளதாக அவ
-
மல்லை சத்யாவின் புதிய கட்சியின் பெயரால் தமிழக வாக்காளர்கள் மத்தியில் குழப்பம்
21 Nov 2025சென்னை : மல்லை சத்யாவின் புதிய கட்சியின் பெயர் விஜய் கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மேலும் வரும் தேர்தலில் 3 டி.வி.கே.
-
அரசியல் கட்சி பொதுக்கூட்டம், ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்விற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது தமிழக அரசு
21 Nov 2025சென்னை : அரசியல் பொதுக்கூட்டம், மக்கள் அதிகம் கூடும் பொதுக்கூட்டம், ஊர்வலம், ரோடு ஷோ, ஆர்ப்பாட்டம், போராட்டம், கலாச்சார மத நிகழ்விற்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சென்ன
-
இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை: கவுகாத்தியில் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் : புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்
21 Nov 2025கவுகாத்தி : இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று கவுகாத்தியில் தொடங்குகிறது. இந்திய அணி கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வங்கதேசத்தில் 5.7 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்: 6 பேர் உயிரிழப்பு
21 Nov 2025டாக்கா, வங்காளதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 6 பேர் உயிரிழந்தனர்.
-
நாம் அனைவரும் எஸ்.ஐ.ஆர். பணியை ஆதரிக்க வேண்டும் : உள்துறை மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
21 Nov 2025காந்திநகர் : நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எஸ்.ஐ.ஆர். பணியை முழுமையாக ஆதரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
மெக்சிகோவின் பாத்திமா போஷ் மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்வு
21 Nov 2025பாங்காக், மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டத்தை மெக்சிகோ பாத்திமா போஷ் வென்றார்.
-
ரூ.89.70 கோடி மதிப்பிலான 584 குடியிருப்புகள்: ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
21 Nov 2025சென்னை : தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (21.11.2025) சென்னை ஹாரிங்டன் சாலை வேம்புலி அம்மன் திட்டப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வீட்டு வசதி மற்றும
-
2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? - அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை விளக்கம்
21 Nov 2025கிருஷ்ணகிரி : தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை தெரிவித்தார்.
-
சிறுமி கொலை வழக்கில் அசாம் வாலிபருக்கு சாகும் வரை சிறை : உறுதி செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
21 Nov 2025மதுரை : சிறுமி கொலை வழக்கில் அசாம் வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
சீனாவுக்கு உளவு பார்த்ததாக புகார்: முன்னாள் பெண் மேயர் உள்பட எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை
21 Nov 2025மணிலா, சீனாவுக்கு உளவு பார்த்த புகாரில் பிலிப்பைன்சின் வடக்கு பிராந்தியமான பம்பன் நகர முன்னாள் பெண் மேயர் உள்பட 8 பேருக்கு ஆயுள் விதிக்கப்பட்டுள்ளது.
-
தரிசன முன்பதிவு எண்ணிக்கை குறைப்பு: சபரிமலையில் கட்டுக்குள் வந்தது பக்தர்கள் கூட்டம்
21 Nov 2025சபரிமலை, தரிசன முன்பதிவு எண்ணிக்கையை 5 ஆயிரமாக குறைத்ததை அடுத்து சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பு வழக்கு: மேலும் 4 பேருக்கு என்.ஐ.ஏ. காவல்
21 Nov 2025புதுடெல்லி, டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் 4 பேரை என்.ஐ.ஏ. காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதி
21 Nov 2025கொல்கத்தா : கொல்கத்தாவில் ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் பீதியடைந்தனர்.
-
கா்நாடக அரசியலில் திடீர் குழப்பம்: துணை முதல்வர் சிவகுமார் ஆதரவாளர்கள் சித்தராமையாவுக்கு எதிராக போர்க்கொடி
21 Nov 2025பெங்களூரு : முதல்வர் சித்தராமையா ஆட்சியில் அமர்ந்து 2.5 ஆண்டுகள் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில், சித்தராமையாவுக்கு எதிராக ஆளும் காங்கிரசில் துணை முதல்வ
-
கோவை சர்வதேச திரைப்பட விழா: 81 நாடுகளின் 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன
21 Nov 2025சென்னை, வருகிற 28-ம் தேதி வரை நடைபெறும் சர்வதேச திரைப்பட கோவாவில் தொடங்கியது. இவ்விழாவில், 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன.
-
மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூர், திருவாரூரில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் வரும் 23-ம் தேதி ஆர்ப்பாட்டம்
21 Nov 2025சென்னை : மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் வரும் 23, 24-ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மக்கள் சந்திப்பு பயணத்திற்கு தயாராகிறார்: விஜய் மக்கள் பாதுகாப்பு படைக்கு தீவிர பயிற்சி
21 Nov 2025சென்னை, அடுத்த மக்கள் சந்திப்பு பயணத்திற்கு தயாராகும் விதமாக விஜய் மக்கள் பாதுகாப்பு படைக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
-
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
21 Nov 2025திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஜனாதிபதி திரெளபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
கடற்படை ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக உ.பி.யை சேர்ந்த இருவர் கைது
21 Nov 2025பெங்களூரு : கடற்படைக்காக தயாரிக்கப்படும் கப்பல்களின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய உ.பி.யை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. வக்கீல் ஆஜராக உத்தரவு
21 Nov 2025கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ. வக்கீல் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
-
டெல்லியில் மேலும் மோசமடையும் காற்றின் தரம்
21 Nov 2025புதுடெல்லி : டெல்லியில் தொடர்ந்து காற்றின் தர குறியீடு மோசமாக இருந்து வரும் நிலையில், அங்கு நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது.


