எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், நளினி உட்பட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்திருந்தார். அப்போது அவர் மக்களோடு மக்களாக கலந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மனித வெடிகுண்டு வெடித்து ராஜீவ் காந்தி ரத்த வெள்ளத்தில் பலியானார். இது தமிழகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கொலையில் சம்பந்தப்பட்ட சிவராஜன், தனு ஆகியோர் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பிறகு கொலையாளிகள் மற்றும் கொலை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டனர். இவர்களில் பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், நளினி ஆகிய 7 பேர் தமிழக சிறைகளில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
தண்டனை காலம் முடியும் முன்பே இந்த 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கடந்த 2014 பிப்ரவரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இவர்களை விடுதலை செய்ய தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில் மீண்டும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் அவர்களது விடுதலை பற்றி முடிவெடுக்கப்பட்டு கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் கவர்னர் முடிவு ஏதும் எடுக்கவில்லை. இதுகுறித்து, உரிய முடிவெடுக்க வேண்டும் என அப்போதையை எதிர்க்கட்சியான தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கவர்னருக்கு வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில் அந்த தீர்மானத்தை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தீவிரமாக ஆராய்ந்து தன் கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த ஜனவரி மாதம் 25-ல் அனுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் ஜனாதிபதி முடிவு செய்வதே உகந்ததாக இருக்கும் என்று அவர் கூறியதாக தெரிகிறது.
தற்போது தமிழகத்தில் தி.மு.க. அரசு அமைந்துள்ள நிலையில், 7 பேர் விடுதலை குறித்து ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன. ஏழு பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று முன்தினம் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், நேற்று சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோருடன் முதல்வர் ஸ்டாலின், எழுவர் விடுதலை குறித்து ஆலோசனை நடத்தினார். எழுவர் விடுதலை விவகாரத்தில் உள்ள சிக்கல்கள் மற்றும் கவர்னரின் தாமதம் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025