முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருவநிலை மாற்றத்துக்கு மனிதனின் பொறுப்பற்ற வாழ்க்கையே காரணம் : பிரதமர் மோடி பேச்சு

புதன்கிழமை, 26 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மனிதனின் பொறுப்பற்ற சுயநலமான வாழ்க்கையே பருவநிலை மாற்றத்துக்கு காரணம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம், சர்வதேச புத்த கூட்டமைப்புடன் இணைந்து, உலகம் முழுவதும் உள்ள 50-க்கும் மேற்பட்ட புத்த மத தலைவர்களை ஒன்றிணைத்து நடந்த  கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். காணொலி வாயிலாக நடந்த இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, 

பொருளாதார ரீதியில், கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டைவிட தற்போது கொரோனா குறித்து நல்ல புரிதல் உள்ளது. மனிதனின் தீவிர முயற்சியால், ஓராண்டுக்குள்  தடுப்பூசி வந்தது. மருத்துவர், செவிலியர், உள்ளிட்டோருக்கு நன்றி. 

கொரோனாவைபோல் மனிதன் சந்திக்கும் மற்றொரு சவால், பருவநிலை மாற்றம். மனிதனின் பொறுப்பற்ற சுயநலமான வாழ்க்கையே அதற்கு காரணம். பருவநிலை மாற்றத்தால் ஆறுகள், காடுகள் ஆபத்தில் உள்ளது, பனிப்பாறைகள் உடைகின்றன. அதோடு பயங்கரவாதமும் பெரும் சவாலாக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து