முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிசம்பருக்குள் இந்தியாவில் 200 கோடி தடுப்பூசி இருக்கும்: பா.ஜ.க. தேசியத் தலைவர் நட்டா தகவல்

வியாழக்கிழமை, 10 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் 200 கோடி கொரோனா தடுப்பூசி இருக்கும் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

அருணாச்சல பிரதேசத்தின் பா.ஜ.க. அலுவலகத்தை காணொலி மூலம் நேற்று திறந்துவைத்த ஜே.பி.நட்டா, கடந்த ஆண்டு கொரோனா பரவல் முதல் அலையின்போது நம்மிட்டம் கொரோனா பரிசோதனைக்கே ஒரே ஒரு சோதனைக் கூடம் தான் இருந்தது.  கொரோனாவை எதிர்கொள்ள தேசம் தன்னைத் தானே தகவமைத்துக் கொண்டுள்ள விதம் பாராட்டுக்குரியது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஆக்சிஜன் உற்பத்தி 900 மெட்ரிக் டன்னில் இருந்து 9446 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 9 மாதங்களில், இந்தியா இரண்டு தடுப்பூசிகளை உற்பத்தி செய்திருக்கிறது.

இது மிகப்பெரிய சாதனை. இன்று இந்தியாவில் 13 நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் 19 நிறுவனங்களாக இது அதிகரிக்கும். இந்தியாவில் டிசம்பர் 2021க்குள் 200 கோடி தடுப்பூசிகள் இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் நட்டா கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து