எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சேலம் : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து நேற்று தண்ணீர் திறந்து வைத்தார்.
தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணையின் மூலமாக சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிறது. முதலில் குறுவை சாகுபடியும், தொடர்ந்து சம்பா தாளடி நெல் பயிர் சாகுபடியும் செய்யப்படுகிறது. அணையில் போதுமான தண்ணீர் இருப்பு இருக்கும்பட்சத்தில் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். தற்சமயம் மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதாலும், பருவ மழையை எதிர்நோக்கியும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக நேற்று காலை 10.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட்டார். இதற்காக மேல்மட்ட மதகு பகுதியில் மேடை அமைக்கப்பட்டு அங்கிருந்து மின் விசையை இயக்கி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்பு அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் மூலமாக பாசனத்திற்கான தண்ணீர் வெளியேற்றப்பட்டன. கால்வாயில் சீறிப்பாய்ந்து வந்த தண்ணீரை மலர்தூவி மு.க.ஸ்டாலின் வரவேற்று வணங்கினார்.
அணை வரலாற்றில் இந்த திட்டமிட்ட தேதியில் இதுவரை 17 முறைகள் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது 18-வது முறையாக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஜூன் 12-ம் தேதிக்கு முன்பு 10 முறையும், ஜூன் 12-ம் தேதிக்கு பிறகு 60 முறையும் இதுவரையில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது திறக்கப்படும் தண்ணீர் திறப்பு அணை வரலாற்றில் 88-வது ஆண்டாகும். முதல்கட்டமாக நேற்று வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படுகிறது.
டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்காக சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டும் அல்லாமல் கடைமடை வரை பாசன கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். நேற்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1, 170 அடியாகவும், அணையின் நீர்மட்டம் 96.81 அடியாக இருந்தது.
மேட்டூர் அணையில் இருந்து ஈரோடு மாவட்டம் பாசூர் வரை காவிரி ஆற்றில் 7 கதவணைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி 7 தடுப்பணைகளிலும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டன. இதற்காக ஏற்கனவே கதவணைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
காவிரி டெல்டா விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தியும், நீர்ப்பங்கீட்டில் நிலைமைக்கேற்ப தண்ணீரை முறைவைத்து பயன்படுத்தவும், நீர்வளத் துறை அலுவலர்களுடன் ஒத்துழைப்பு நல்கியும், வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்களின் ஆலோசனைகளைப் பெற்று, செம்மை நெல் சாகுபடி உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குறைந்த பரப்பளவில் மிக அதிக அளவு மகசூல் பெற்று பயனடைய வேண்டுமென முதல்வர் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, செந்தில் பாலாஜி, எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மருத்துவர் மா.மதிவேந்தன், எம்.பி.க்கள் எஸ்.ஆர். பார்த்திபன், டாக்டர் பொன்.கௌதம்சிகாமணி, டாக்டர் செ. செந்தில் குமார் மற்றும் ஏ.கே.பி. சின்ராஜ், அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதிஸ்டாலின், இரா. இராஜேந்திரன் மற்றும் எஸ். சதாசிவம், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா, சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், நீர்வளத் துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர் இராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சென்னை ஐகோர்ட் பதிவாளரை சேர்க்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
12 Dec 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தனி நீதிபதி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
-
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட மேலும் 17 லட்சம் பேருக்கு ரூ.ஆயிரம் உரிமைத்தொகை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட மேலும் 17 லட்சம் பேருக்கு ரூ.ஆயிரம் உரிமைத்தொகை வழங்கும் விரிவாக்க திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி
-
மேகதாது அணை கட்ட 30 பேர் கொண்ட குழு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Dec 2025சென்னை, மேகதாது அணை கட்ட 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் அதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளஆர்.
-
ஓய்வு முடிவை திரும்ப பெற்ற வினேஷ் போகத் மீண்டும் களம் காண்கிறார்
12 Dec 2025மும்பை, ஓய்வு முடிவை மாற்றிவிட்டு மீண்டும் ஒலிம்பிக் களத்துக்குத் திரும்பவிருப்பதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்திருக்கிறார்.
-
வெலிங்டன் 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து அபார வெற்றி
12 Dec 2025வெலிங்டன், வெலிங்டனில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
-
ரத்தாகும் விமானங்களுக்கு கட்டணத்தை திருப்பி செலுத்தும் ஏர் இந்தியா
12 Dec 2025சென்னை, பனிமூட்டம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகளின் கட்டணத்தை திருப்பி செலுத்தியது ஏர் இந்தியா நிறுவனம்.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: டிக்கெட் விற்பனை துவக்கம்: குறைந்தபட்ச விலை ரூ.100-ஆக நிர்ணயம்
12 Dec 2025துபாய், டி-20 உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. குறைந்தபட்ச விலை ரூ.100-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம்: செங்கோட்டையன் அழைப்பு
12 Dec 2025ஈரோடு, விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம் என்று செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்.
-
தீவிரமடையும் காற்று மாசு விவகாரம்: விவாதம் நடத்த ராகுல் விடுத்த அழைப்பை ஏற்றது மத்திய அரசு
12 Dec 2025டெல்லி, காற்று மாசு விவகாரம் குறித்து விவாதம் நடத்த கோரிக்கை விடுத்த ராகுல் காந்தியின் அழைப்பை மத்திய அரசு ஏற்றுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 13-12-2025
13 Dec 2025 -
திருவண்ணாமலையில் இன்று தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல சந்திப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
13 Dec 2025சென்னை, திருவண்ணாமலையில் இன்று நடக்கும் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல சந்திப்பு கூட்டத்திற்கு கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
-
16 சதவீதம் ஜி.எஸ்.டி.பி. வளர்ச்சியுடன் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
13 Dec 2025சென்னை, மத்திய அரசின் ஆதரவு பெருமளவு இல்லாமல் ஜி.எஸ்.டி.பி.
-
இன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
13 Dec 2025சென்னை, இன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மேகதாது அணை விவகாரத்தில் மறுசீராய்வு மனு: தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் சங்கம் நன்றி
13 Dec 2025சென்னை, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
-
வாரராசிபலன்
13 Dec 2025 -
பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: டெல்லியில் ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி
13 Dec 2025டெல்லி, பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினமான நேற்று பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் மலர் தூவி மரிய


