முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-ம் வகுப்பு சான்றிதழில் தேர்ச்சி என்று மட்டுமே இருக்கும்: பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை: அமைச்சர் தகவல்

திங்கட்கிழமை, 14 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 10-ம் வகுப்பு சான்றிதழில்ல தேர்ச்சி என்று மட்டுமே இருக்கும் என்றும், பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.  கொரோனா காலத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் விதிமுறைகளை மாணவர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். 

தற்போதைய நிலையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து பாடம் நடத்தும் நிலை குறித்து யோசிக்கவில்லை. கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ் ஆப் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வரும் முறை தொடரும்.  ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் அனைவரும் தேர்ச்சி என்று இருக்கும். மதிப்பெண்கள் இருக்காது. 

தனியார் பள்ளிகள் 75 சதவீதம் மட்டுமே கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும். அந்த 75 சதவீத  கட்டணத்தை 30 சதவீதம், 45 சதவீதம்  என இரு தவணைகளாக  வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கு மேல் ஏதேனும் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலித்தால் எங்களுக்கு தகவல் தெரிவிக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளி ஆசிரியர்கள் பலர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர் என்ற செய்தி அறிந்தோம். மிகவும் கடினமான சூழல் தான். இதுகுறித்தும் கலந்தாலோசித்து அவர்களுக்குத் தேவையான உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து