முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஐ.ஜி.க்கள் உட்பட 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

புதன்கிழமை, 28 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் 2 ஐ.ஜி.க்கள் உட்பட 12 ஐ.பி.எஸ். காவல் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்த உத்தரவும், மாற்றப்பட்ட அதிகாரிகள் வகித்த பதவி, தற்போதைய இடமாற்றம் விவரம்:

1. ரயில்வே போலீஸ் ஐ.ஜி.யாக (சென்னை) பதவி வகிக்கும் சுமித் சரண் மாற்றப்பட்டு, ஊர்க்காவல் படை ஐ.ஜி.யாக (சென்னை) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2. பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு (சென்னை) ஐ.ஜி.யாகப் பதவி வகிக்கும் தினகரன் மாற்றப்பட்டு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3. திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி.யாகப் பதவி வகிக்கும் கயல்விழி மாற்றப்பட்டு, சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்

4. திருவாரூர் மாவட்ட எஸ்.பி. வி.ஆர்.சீனிவாசன் மாற்றப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

5. சென்னை சி.பி.சி.ஐ.டி. சிறப்புப் பிரிவு எஸ்.பி. விஜயகுமார் மாற்றப்பட்டு, திருவாரூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

6. திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ரவாளி பிரியா மாற்றப்பட்டு, தஞ்சாவூர் எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

7. தஞ்சாவூர் எஸ்.பி. தேஷ்முக் ஷேகர் சஞ்சய் மாற்றப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

8. ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா மாற்றப்பட்டு, சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி-2 ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

9. அடையாறு காவல் துணை ஆணையராகப் பதவி வகிக்கும் விக்ரமன் மாற்றப்பட்டு, சென்னை சி.பி.சி.ஐ.டி சிறப்புப் பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

10. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாகப் பதவி வகித்து வரும் தேவராணி மாற்றப்பட்டு, சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி-3 ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

11. சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி-2 அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு, சென்னை, செயின்ட் தாமஸ் மவுண்ட் சட்டம்- ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

12.நில அபகரிப்பு தடுப்பு, சிறப்புப் பிரிவு எஸ்.பி. ஷியாமளா தேவி மாற்றப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவின் (சென்னை) துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து