முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 மாதத்துக்கு ஒருமுறை இனி டெல்லி வருவேன் : மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

சனிக்கிழமை, 31 ஜூலை 2021      அரசியல்
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஜனநாயகம் கண்டிப்பாக நீடிக்க வேண்டும். 2 மாதங்களுக்கு ஒருமுறை இனி மேல் டெல்லிக்கு வருவேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டெல்லி பயணத்தை முடித்து விட்டுச் செல்லும்போது மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக முதல்வரானபின் முதல் முறையாக டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டார். டெல்லியில் 5 நாட்கள் பயணம் முடித்து முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் இரவு கொல்கத்தாவுக்குப் புறப்பட்டார். அப்போது திரிணாமுல் எம்.பி. அபிஷேக் பானர்ஜி இல்லத்தில் மம்தா பானர்ஜி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

என்னுடைய பயணம் வெற்றிகரமாக அமைந்தது. அரசியல் பயணமாக வந்து என்னுடைய அரசியல் சகாக்கள் பலரையும் சந்தித்துப் பேசினேன். அரசியல் ரீதியாகப் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டோம். ஜனநாயகம் கண்டிப்பாக நீடித்திருக்க வேண்டும், ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும், நாட்டைப் பாதுகாக்க வேண்டும். இனிமேல் ஒவ்வொரு 2 மாதங்களுக்கு ஒருமுறை டெல்லி வருவேன்.

விவசாயிகள் போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாகவே இருக்கிறேன், இது தொடர்பாக அவர்களுடன் அடிக்கடி பேசி வருகிறேன். அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதைவிடச் சிறந்தது வேறு ஏதும் இருக்க முடியாது. கொரோனா பரவல் பிரச்சினையால் என்னால் ஒவ்வொரு தலைவரையும் தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியவில்லை. ஆனால், சந்திப்புகளின் முடிவு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இனிமேல் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றுவோம். எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒரே நோக்கத்துக்காக ஒன்று சேர்வது தானாகவே நடக்கும். என்னுடைய பயணம் வெற்றிகரமாக அமைந்தது.  இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து