முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களிடம் 94 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு மத்திய அரசு தகவல்

புதன்கிழமை, 18 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: மாநிலங்களிடம்  94 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இதில் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த 21-ம் தேதி அமல்படுத்திய மத்திய அரசு, இந்த பணிகளை மேலும் முடுக்கி விட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலங்களிடம்  94 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்,

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 57 கோடியே 88 லட்சத்து 90 ஆயிரத்து 150 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அதில், 55,11,64,635 கொரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது.  தற்போது 94 லட்சத்து 03 ஆயிரத்து 637 தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொகுப்பில் இருந்து கூடுதலாக 18,62,530 தடுப்பூசிகளை அனுப்பப்பட்டுள்ளன. மேலும், நாடு முழுவதும் 56,06,52,030 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 55,05,075 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து