முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியவெள்ளம்: போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்

சனிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

டெல்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை கன மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. 

புல் பிரஹலாதர் சுரங்கபாலம், காசியாபாத்தின் கவுசாலா சுரங்க பாலமும் தண்ணீரில் மூழ்கின. இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துவாராகா - பாலம் மேம்பாலம், எய்ம்ஸ் செல்லும் மேம்பாலம் பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியது. ஐ.டி.ஓ. பகுதியிலும் தண்ணீர் தேங்கியது. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதசாரிகளும் சாலைகளை கடக்க கடும் சிக்கலை சந்தித்தனர்.

அந்த பகுதிகளில் போக்குவரத்து போலீசார், நெரிசலை சமாளிக்கும் பணியில் ஈடுபட்டனர். ராஜ்காட் பகுதியிலும் மழை நீர் தேங்கியது. மண்டி ஹவுஸ் பகுதியில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதனை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியதால், பல இடங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், டெல்லிக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுகிறது. டெல்லியின் பல இடங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சப்தர்ஜங் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 138.8 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இந்த சீசனில் பதிவான அதிகபட்ச மழை இதுவாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து