முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 30,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 22 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: இந்தியாவில் புதிதாக 30,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்து உள்ளது.

நாட்டில் கொரோனா 2-வது அலையில் பாதிப்புகளின் தீவிரம் சமீப காலங்களாக குறைந்து வருகிறது.  இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கை நேற்று முன்தினம் 34,457 ஆகவும், கடந்த வெள்ளியன்று 36,571 ஆகவும் பதிவாகி இருந்தது.  இதனால், முந்தின பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது நேற்று தொற்று குறைந்துள்ளது.  மொத்த பாதிப்பு 3,24,24,234 ஆக உயர்வடைந்து உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 403 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இது நேற்று முன்தினம் 375 ஆக இருந்தது.  இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,34,367 ஆக உயர்ந்து உள்ளது.  38,487 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3,16,36,469 ஆக உயர்வடைந்து உள்ளது.  நாடு முழுவதும் 3 லட்சத்து 53 ஆயிரத்து 398 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து