எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் நாளை 20 லட்சம் பேர்களுக்கு தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள் என மக்கள் வசதிக்கேற்ற இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் ஞாயிற்றுக் கிழமை 40 ஆயிரம் மையங்களில் நடைபெற இருப்பதையொட்டி முன்கூட்டியே தடுப்பூசியை அதிகமாக வரவழைத்துள்ளோம். தற்போதைய நிலவரப்படி 32 லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதிகள் தொலைதூர பகுதிகள், கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதிகள் மற்றும் பிற மாநில எல்லைகளில் அதிக கவனம் செலுத்த உள்ளோம். கொரோனா 3-வது அலையை தவிர்ப்பதற்காகவும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் மெகா சிறப்பு முகாம் நடைபெற உள்ளதால் 18 வயதுக்கு மேற்பட்ட பொது மக்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மையத்திலும் போதிய பணியாளர்கள் பணியில் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சுற்றுயுள்ள பகுதிகள் மட்டுமின்றி 19 மாவட்டங்களில் ஏற்ற இறக்கத்துடன் கொரோனா தொற்று உள்ளதால் இந்த முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
சாம்சனுக்கு பயிற்சியாளர் ஆதரவு
13 Sep 2025சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் சொதப்புவார் என்று அர்த்தமில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் : எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
13 Sep 2025சிங்காநல்லூர் : கோவையில் மெட்ரோ ரயில் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது, ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏதேதோ பிரச்னை சொல்லி முடக்கிவைத்துள்ளனர்.