முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை ஷில்பா கணவர் மீது 1,500 பக்க குற்றப்பத்திரிகை: நீதிமன்றத்தில் தாக்கல்

வியாழக்கிழமை, 16 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில், நடிகை ஷில்பாவின் கணவர் மீது 1,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தயாரிப்பாளருமான ராஜ் குந்த்ரா, திரைப்படத் துறையில் நிதி நெருக்கடியால் போராடிக் கொண்டிருக்கும் நடிகைகளை அடையாளங் கண்டு, அவர்களை வைத்து ஆபாச படங்களை தயாரித்தார். அதனை, ஆப்ஸ் மூலம் வெளியிட்டு பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக ராஜ் குந்த்ரா மற்றும் அவரது கூட்டாளிகளை மும்பை போலீசார் கடந்த ஜூலை மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது, அவர்கள் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், எஸ்பிளனேடு நீதிமன்றத்தில் மும்பை போலீசார் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில், ‘ராஜ் குந்த்ரா மற்றும் குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுடன் சேர்ந்த திரைப்படத் துறையில் பொருளாதார பிரச்னைகளை எதிர்கொண்டுள்ள இளம் பெண்களை ஆபாசமான வழிகளில் படமாக்கி, அதன் மூலம் பாலியல் தொழிலை செய்துள்ளார். அவர்களிடம் இருந்து தொழில்நுட்ப பகுப்பாய்வு, சாட்சிகளின் அறிக்கைகள் மற்றும் அவரது அலுவலகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளோம். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள 1,500 பக்க துணை குற்றப்பத்திரிகையில், கூடுதல் ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து