முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 1,697 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதார துறை அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த மாத இறுதியில் இருந்து தொடர்ந்து குறைந்து வருகிறது.  இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட தகவலின்படி, 

தமிழகத்தில் நேற்று புதிதாக 1,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,45,380 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் நேற்று  27 பேர் (அரசு மருத்துவமனை - 24 பேர், தனியார் மருத்துவமனை - 3பேர்) உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,337 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் நேற்று மேலும் 1,594பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,93,074 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் தற்போது 16,969 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று மேலும் 232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் நேற்று 215 பேருக்கும், ஈரோட்டில் 131 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து