முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசி.க்கு எதிரான இன்றைய டெஸ்ட்டில் இந்திய பேட்டிங் வரிசை எப்படி இருக்க வேண்டும்? வி.வி.எஸ். லக்ஷ்மண் யோசனை

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை: நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை எப்படி இருக்க வேண்டும்? என்று வி.வி.எஸ். லக்ஷ்மண் யோசனை தெரிவித்துள்ளார். அந்த வரிசையில் ஸ்ரோயஸ் ஐயர் தவிர்க்க முடியாத வீரராக இடம் பெற்றுள்ளார்.

புஜாரா - ரஹானே...

2-வது டெஸ்ட் மும்பையில் இன்று தொடங்குகிறது. விராட் கோலி இந்திய அணிக்கு மீண்டும் தலைமை தாங்குவதால் யாரை அணியிலிருந்து நீக்குவது என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது. புஜாராவும் ரஹானேவும் சமீபகாலமாக சுமாராக விளையாடி வருவதால் அவர்களில் ஒருவரை நீக்கவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. 

சிரமமானது... 

இதற்கு ஒரு தீர்வை முன்வைக்கிறார் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மண். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் கூறியதாவது., இந்திய அணி சிரமமான சூழலில் இருந்தபோது ரன்கள் எடுத்து அணிக்குப் பங்களித்துள்ளார் ஸ்ரோயஸ் ஐயர். இந்திய அணியின் பேட்டிங் வரிசையை 2-வது டெஸ்டில் தீர்மானிப்பது சிரமமானது. மயங்க் அகர்வால் இரு இன்னிங்ஸிலும் சுமாராக விளையாடினார். கிரீஸிலும் அவர் அசெளகரியமாக உணர்ந்ததைக் காண முடிந்தது. 

கடினமானது...

புஜாராவால் தொடக்க வீரராக விளையாட முடியும். இதற்கு முன்பு தொடக்க வீரராக விளையாடியுள்ளார். 3-ம் நிலை வீரராக ரஹானே களமிறங்கலாம். விராட் கோலி, ஸ்ரோயஸ் ஐயர் அடுத்து களமிறங்கலாம். இம்முடிவை எடுப்பது கோலிக்கும், டிராவிட்டுக்கும் கடினமாக இருக்கலாம். அவர்கள் சரியான முடிவை எடுத்து ஸ்ரோயஸ் ஐயரின் பங்களிப்பை உதாசீனப்படுத்த மாட்டார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து