முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் எரிமலை வெடித்ததில் 13 பேர் பலி : 16 பேர் கவலைக்கிடம்: 900 பேர் வெளியேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

ஜகார்தா : இந்தோனேசியாவின் ஜாவா தீவில் எரிமலை வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ள செமேரு எரிமலை நேற்று முன்தினம் வெடித்ததால் அப்பகுதியின் வீடுகள், பாலங்கள் இடிந்து விழுந்தன. செமேரு எரிமலை வெடித்தால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 100 பேர் காயமடைந்த நிலையில் 100 பேர் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 16 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

கடந்த சிலநாட்களாகவே எரிமலை குமுறி வந்தது. இந்நிலையில் திடீரென எரிமலை வெடித்துச் சிதறியதில் ஊருக்குள் ஆறாக நெருப்புக்குழம்பு பாய்ந்தது. சுமார் 40 அடி ஆயிரம் உயரத்திற்கு எரிமலை சாம்பல் படர்ந்தது. இதனால் பல கிராமங்கள் எரிமலை சாம்பலால் சூழ்ந்துள்ளன. எரிமலை வெடித்துச் சிதறிய சத்தம் கேட்டதை அடுத்து வீடுகளுக்குள் இருந்த மக்கள் அலறிஅடித்தபடி பாதுகாப்பான இடம் தேடி ஓடினர்.

900-க்கும் மேற்பட்ட மக்கள் பேரிடர் மீட்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்காலிக முகாம்களில் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.   இதற்கிடையே 7 பேர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து கனமழையும் பெய்துவருவதால் எரிமலையை சுற்றியுள்ள பகுதிகள் நெருப்புக்குழம்புடன் சேர்ந்து சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் இந்தோனேசியாவின் கடற்கரையில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அறிவித்தது. இந்தோனேசியாவின் கிழக்குத் தீவான ஹல்மஹேராவில் அமைந்துள்ள டோபெலோ நகருக்கு வடக்கே 6-ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்று முன்தினம்  23:47 மணிக்கு ஏற்பட்டது. இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தின் தலைநகரான ஜெயபுராவின் கடற்கரையில் நேற்று அதிகாலை 01:10 மணிக்கு 5.4 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவில் 120-க்கும் மேற்பட்ட எரிமலைகள் கனன்று கொண்டே உள்ளன, அவை பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ளதால் நில அதிர்வு தாக்கம் ஏற்படுகிறது புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து