எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த மூன்றாவது டெஸ்டில் ஏமாற்றிய இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என, சமநிலையில் இருந்தது. மூன்றாவது டெஸ்ட் கேப்டவுனில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 223, தென் ஆப்ரிக்கா 210 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 198 ரன்னுக்கு சுருண்டது. பின், 212 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 101 ரன் எடுத்திருந்தது. பீட்டர்சன் (48) அவுட்டாகாமல் இருந்தார்.
பீட்டர்சன் அபாரம்:
நான்காம் நாள் ஆட்டத்தில் வெற்றிக்கு 111 ரன் தேவைப்பட்ட நிலையில் தென் ஆப்ரிக்காவின் கீகன் பீட்டர்சன், வான் டெர் துசென் ஜோடி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. ஷமி பந்தில் 2 ரன் எடுத்த பீட்டர்சன், டெஸ்ட் அரங்கில் தனது 2-வது அரைசதமடித்தார். நிதானமாக விளையாடிய இவர்கள், இந்திய பவுலர்களிடம் கொடுக்கவில்லை. மூன்றாவது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்திருந்த போது ஷர்துல் தாகூர் வேகத்தில் பீட்டர்சன் (82) போல்டானார்.
பவுமா அசத்தல்:
பின் இணைந்த வான் டெர் துசென், டெம்பா பவுமா ஜோடி பொறுப்பாக விளையாடியது. பும்ரா வீசிய 52-வது ஓவரில் 2 பவுண்டரி விளாசிய பவுமா, அஷ்வின் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட்டுக்கு 212 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வான் டெர் துசென் (41), பவுமா (32) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் பும்ரா, ஷமி, ஷர்துல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
தென் ஆப்ரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை தென் ஆப்ரிக்காவின் கீகன் பீட்டர்சன் கைப்பற்றினார்.
புஜாரா ஏமாற்றம்:
பும்ரா வீசிய 40வது ஓவரின் 4வது பந்தில் தென் ஆப்ரிக்காவின் கீகன் பீட்டர்சன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சிலிப் பகுதியில் நின்றிருந்த புஜாரா நழுவவிட்டார். அப்போது 59 ரன் எடுத்திருந்த பீட்டர்சன், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு 82 ரன் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். பேட்டிங்கில் சொதப்பிய புஜாரா, பீல்டிங் ஏமாற்றியது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
ஆறாவது முறை
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. ஆனால் அடுத்த இரு டெஸ்டில் ஏமாற்றியதால் தொடரை இழந்தது. டெஸ்ட் அரங்கில், ஒரு தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றும், தொடரை இழந்த சோகம் இந்திய அணிக்கு 6வது முறையாக அரங்கேறி உள்ளது. இதற்கு முன், 1984:85 (எதிர்: இங்கிலாந்து, இடம்: இந்தியா), 2002 (எதிர்: விண்டீஸ், இடம்: வெஸ்ட் இண்டீஸ்), 2006-07 (எதிர்: தென் ஆப்ரிக்கா, இடம்: தென் ஆப்ரிக்கா), 2012-13 (எதிர்: இங்கிலாந்து, இடம்: இந்தியா), 2014ல் (எதிர்: இங்கிலாந்து, இடம்: இங்கிலாந்து) இப்படி ஏமாற்றம் அடைந்தது.
நழுவிய வரலாறு
இந்திய அணி, தென் ஆப்ரிக்க மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கேற்ப முதல் போட்டியில் வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த இரு டெஸ்டில் ஏமாற்றியதால் தொடரை இழந்தது. இதுவரை 8 முறை டெஸ்ட் தொடரில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி, ஒரு முறை (2010-1111) மட்டும் தொடரை சமன் செய்திருந்தது. ஏழு முறை (1992-93-96 & 97, 2001&02, 2006&07, 2013&14, 2017&18, 2021&22) தென் ஆப்ரிக்கா கோப்பை வென்றது.
ஒருநாள் தொடர்
டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில் இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. முதல் போட்டி வரும் ஜன. 19-ல் பார்ல் நகரில் துவங்குகிறது. அடுத்த இரு போட்டிகள் ஜனவரி. 21 (இடம்: பார்ல்), ஜனவரி. 23-ல் (இடம்: கேப்டவுன்) நடக்கவுள்ளன.
அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் தென் ஆப்ரிக்காவின் கீகன் பீட்டர்சன் முதலிடம் பிடித்தார். இவர், 3 டெஸ்டில் 276 ரன் (3 அரைசதம்) எடுத்தார். அடுத்த ஐந்து இடங்களை தென் ஆப்ரிக்காவின் எல்கர் (235 ரன்), இந்தியாவின் லோகேஷ் ராகுல் (226), தென் ஆப்ரிக்காவின் பவுமா (221), இந்தியாவின் ரிஷாப் பன்ட் (186), விராத் கோஹ்லி (161) கைப்பற்றினர்.
20 விக்கெட்
அதிக விக்கெட் சாய்த்த பவுலர்கள் பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் ரபாடா முதலிடத்தை கைப்பற்றினார். இவர், 3 டெஸ்டில், 20 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஐந்து இடங்களை தென் ஆப்ரிக்காவின் ஜான்சென் (19 விக்கெட்), லுங்கிடி (15), இந்தியாவின் முகமது ஷமி (14), ஷர்துல் தாகூர் (12), பும்ரா (12) கைப்பற்றினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
நரேந்திர மோடியின் பயோபிக்காக உருவாகும் 'மா வந்தே
22 Sep 2025பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன். நடிக்கிறார்.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
சக்தித் திருமகன் திரைவிமர்சனம்
22 Sep 2025தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை செய்து முடிக்க கூடியவர்.
-
அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
22 Sep 2025இடா நகர், அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் பல்டி
22 Sep 2025சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் பல்டி.
-
தண்டகாரண்யம் திரைவிமர்சனம்
22 Sep 2025நக்சலைட்டுகள் தீவிரவாதிகள், போராளிகள் என்று அறியப்பட்டாலும், உண்மையில் அவர்கள் வலியோரால் வஞ்சிக்கப்பட்ட பழங்குடியினர் என்பதையும், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்த