எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த மூன்றாவது டெஸ்டில் ஏமாற்றிய இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என, சமநிலையில் இருந்தது. மூன்றாவது டெஸ்ட் கேப்டவுனில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 223, தென் ஆப்ரிக்கா 210 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 198 ரன்னுக்கு சுருண்டது. பின், 212 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 101 ரன் எடுத்திருந்தது. பீட்டர்சன் (48) அவுட்டாகாமல் இருந்தார்.
பீட்டர்சன் அபாரம்:
நான்காம் நாள் ஆட்டத்தில் வெற்றிக்கு 111 ரன் தேவைப்பட்ட நிலையில் தென் ஆப்ரிக்காவின் கீகன் பீட்டர்சன், வான் டெர் துசென் ஜோடி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. ஷமி பந்தில் 2 ரன் எடுத்த பீட்டர்சன், டெஸ்ட் அரங்கில் தனது 2-வது அரைசதமடித்தார். நிதானமாக விளையாடிய இவர்கள், இந்திய பவுலர்களிடம் கொடுக்கவில்லை. மூன்றாவது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்திருந்த போது ஷர்துல் தாகூர் வேகத்தில் பீட்டர்சன் (82) போல்டானார்.
பவுமா அசத்தல்:
பின் இணைந்த வான் டெர் துசென், டெம்பா பவுமா ஜோடி பொறுப்பாக விளையாடியது. பும்ரா வீசிய 52-வது ஓவரில் 2 பவுண்டரி விளாசிய பவுமா, அஷ்வின் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட்டுக்கு 212 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வான் டெர் துசென் (41), பவுமா (32) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் பும்ரா, ஷமி, ஷர்துல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
தென் ஆப்ரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை தென் ஆப்ரிக்காவின் கீகன் பீட்டர்சன் கைப்பற்றினார்.
புஜாரா ஏமாற்றம்:
பும்ரா வீசிய 40வது ஓவரின் 4வது பந்தில் தென் ஆப்ரிக்காவின் கீகன் பீட்டர்சன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சிலிப் பகுதியில் நின்றிருந்த புஜாரா நழுவவிட்டார். அப்போது 59 ரன் எடுத்திருந்த பீட்டர்சன், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு 82 ரன் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். பேட்டிங்கில் சொதப்பிய புஜாரா, பீல்டிங் ஏமாற்றியது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
ஆறாவது முறை
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. ஆனால் அடுத்த இரு டெஸ்டில் ஏமாற்றியதால் தொடரை இழந்தது. டெஸ்ட் அரங்கில், ஒரு தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றும், தொடரை இழந்த சோகம் இந்திய அணிக்கு 6வது முறையாக அரங்கேறி உள்ளது. இதற்கு முன், 1984:85 (எதிர்: இங்கிலாந்து, இடம்: இந்தியா), 2002 (எதிர்: விண்டீஸ், இடம்: வெஸ்ட் இண்டீஸ்), 2006-07 (எதிர்: தென் ஆப்ரிக்கா, இடம்: தென் ஆப்ரிக்கா), 2012-13 (எதிர்: இங்கிலாந்து, இடம்: இந்தியா), 2014ல் (எதிர்: இங்கிலாந்து, இடம்: இங்கிலாந்து) இப்படி ஏமாற்றம் அடைந்தது.
நழுவிய வரலாறு
இந்திய அணி, தென் ஆப்ரிக்க மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கேற்ப முதல் போட்டியில் வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த இரு டெஸ்டில் ஏமாற்றியதால் தொடரை இழந்தது. இதுவரை 8 முறை டெஸ்ட் தொடரில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி, ஒரு முறை (2010-1111) மட்டும் தொடரை சமன் செய்திருந்தது. ஏழு முறை (1992-93-96 & 97, 2001&02, 2006&07, 2013&14, 2017&18, 2021&22) தென் ஆப்ரிக்கா கோப்பை வென்றது.
ஒருநாள் தொடர்
டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில் இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. முதல் போட்டி வரும் ஜன. 19-ல் பார்ல் நகரில் துவங்குகிறது. அடுத்த இரு போட்டிகள் ஜனவரி. 21 (இடம்: பார்ல்), ஜனவரி. 23-ல் (இடம்: கேப்டவுன்) நடக்கவுள்ளன.
அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் தென் ஆப்ரிக்காவின் கீகன் பீட்டர்சன் முதலிடம் பிடித்தார். இவர், 3 டெஸ்டில் 276 ரன் (3 அரைசதம்) எடுத்தார். அடுத்த ஐந்து இடங்களை தென் ஆப்ரிக்காவின் எல்கர் (235 ரன்), இந்தியாவின் லோகேஷ் ராகுல் (226), தென் ஆப்ரிக்காவின் பவுமா (221), இந்தியாவின் ரிஷாப் பன்ட் (186), விராத் கோஹ்லி (161) கைப்பற்றினர்.
20 விக்கெட்
அதிக விக்கெட் சாய்த்த பவுலர்கள் பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் ரபாடா முதலிடத்தை கைப்பற்றினார். இவர், 3 டெஸ்டில், 20 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஐந்து இடங்களை தென் ஆப்ரிக்காவின் ஜான்சென் (19 விக்கெட்), லுங்கிடி (15), இந்தியாவின் முகமது ஷமி (14), ஷர்துல் தாகூர் (12), பும்ரா (12) கைப்பற்றினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.