தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த மூன்றாவது டெஸ்டில் ஏமாற்றிய இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என, சமநிலையில் இருந்தது. மூன்றாவது டெஸ்ட் கேப்டவுனில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 223, தென் ஆப்ரிக்கா 210 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 198 ரன்னுக்கு சுருண்டது. பின், 212 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 101 ரன் எடுத்திருந்தது. பீட்டர்சன் (48) அவுட்டாகாமல் இருந்தார்.
பீட்டர்சன் அபாரம்:
நான்காம் நாள் ஆட்டத்தில் வெற்றிக்கு 111 ரன் தேவைப்பட்ட நிலையில் தென் ஆப்ரிக்காவின் கீகன் பீட்டர்சன், வான் டெர் துசென் ஜோடி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. ஷமி பந்தில் 2 ரன் எடுத்த பீட்டர்சன், டெஸ்ட் அரங்கில் தனது 2-வது அரைசதமடித்தார். நிதானமாக விளையாடிய இவர்கள், இந்திய பவுலர்களிடம் கொடுக்கவில்லை. மூன்றாவது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்திருந்த போது ஷர்துல் தாகூர் வேகத்தில் பீட்டர்சன் (82) போல்டானார்.
பவுமா அசத்தல்:
பின் இணைந்த வான் டெர் துசென், டெம்பா பவுமா ஜோடி பொறுப்பாக விளையாடியது. பும்ரா வீசிய 52-வது ஓவரில் 2 பவுண்டரி விளாசிய பவுமா, அஷ்வின் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட்டுக்கு 212 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வான் டெர் துசென் (41), பவுமா (32) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் பும்ரா, ஷமி, ஷர்துல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
தென் ஆப்ரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை தென் ஆப்ரிக்காவின் கீகன் பீட்டர்சன் கைப்பற்றினார்.
புஜாரா ஏமாற்றம்:
பும்ரா வீசிய 40வது ஓவரின் 4வது பந்தில் தென் ஆப்ரிக்காவின் கீகன் பீட்டர்சன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சிலிப் பகுதியில் நின்றிருந்த புஜாரா நழுவவிட்டார். அப்போது 59 ரன் எடுத்திருந்த பீட்டர்சன், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு 82 ரன் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். பேட்டிங்கில் சொதப்பிய புஜாரா, பீல்டிங் ஏமாற்றியது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
ஆறாவது முறை
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. ஆனால் அடுத்த இரு டெஸ்டில் ஏமாற்றியதால் தொடரை இழந்தது. டெஸ்ட் அரங்கில், ஒரு தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றும், தொடரை இழந்த சோகம் இந்திய அணிக்கு 6வது முறையாக அரங்கேறி உள்ளது. இதற்கு முன், 1984:85 (எதிர்: இங்கிலாந்து, இடம்: இந்தியா), 2002 (எதிர்: விண்டீஸ், இடம்: வெஸ்ட் இண்டீஸ்), 2006-07 (எதிர்: தென் ஆப்ரிக்கா, இடம்: தென் ஆப்ரிக்கா), 2012-13 (எதிர்: இங்கிலாந்து, இடம்: இந்தியா), 2014ல் (எதிர்: இங்கிலாந்து, இடம்: இங்கிலாந்து) இப்படி ஏமாற்றம் அடைந்தது.
நழுவிய வரலாறு
இந்திய அணி, தென் ஆப்ரிக்க மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கேற்ப முதல் போட்டியில் வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த இரு டெஸ்டில் ஏமாற்றியதால் தொடரை இழந்தது. இதுவரை 8 முறை டெஸ்ட் தொடரில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி, ஒரு முறை (2010-1111) மட்டும் தொடரை சமன் செய்திருந்தது. ஏழு முறை (1992-93-96 & 97, 2001&02, 2006&07, 2013&14, 2017&18, 2021&22) தென் ஆப்ரிக்கா கோப்பை வென்றது.
ஒருநாள் தொடர்
டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில் இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. முதல் போட்டி வரும் ஜன. 19-ல் பார்ல் நகரில் துவங்குகிறது. அடுத்த இரு போட்டிகள் ஜனவரி. 21 (இடம்: பார்ல்), ஜனவரி. 23-ல் (இடம்: கேப்டவுன்) நடக்கவுள்ளன.
அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் தென் ஆப்ரிக்காவின் கீகன் பீட்டர்சன் முதலிடம் பிடித்தார். இவர், 3 டெஸ்டில் 276 ரன் (3 அரைசதம்) எடுத்தார். அடுத்த ஐந்து இடங்களை தென் ஆப்ரிக்காவின் எல்கர் (235 ரன்), இந்தியாவின் லோகேஷ் ராகுல் (226), தென் ஆப்ரிக்காவின் பவுமா (221), இந்தியாவின் ரிஷாப் பன்ட் (186), விராத் கோஹ்லி (161) கைப்பற்றினர்.
20 விக்கெட்
அதிக விக்கெட் சாய்த்த பவுலர்கள் பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் ரபாடா முதலிடத்தை கைப்பற்றினார். இவர், 3 டெஸ்டில், 20 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஐந்து இடங்களை தென் ஆப்ரிக்காவின் ஜான்சென் (19 விக்கெட்), லுங்கிடி (15), இந்தியாவின் முகமது ஷமி (14), ஷர்துல் தாகூர் (12), பும்ரா (12) கைப்பற்றினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 23-05-2022
23 May 2022 -
காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி : இலங்கை எம்.பி. மனோ.கணேசன் உருக்கம்
23 May 2022இலங்கை : காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி என்று இலங்கை எம்.பி. மனோ.கணேசன் தெரிவித்துள்ளார்.
-
உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு- அதிபர் ஜெலன்ஸ்கி கவலை
23 May 2022உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
-
குரங்கு காய்ச்சல் - 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் பாதிப்பு
23 May 2022ஜெனீவா : 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
23 May 2022குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
-
பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம்
23 May 2022கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பராமரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆஸ்திரேலியா புதிய பிரதமராக பதவியேற்றார் அந்தோணி அல்பானீஸ்
23 May 2022கான்பெரா : ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் அந்தோணி அல்பானீஸ்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது
23 May 2022முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
23 May 2022புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
ரூ.500 கோடி திட்டங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
23 May 2022புதுடெல்லி : இனி ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘கதிசக்தி’ திட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்டுள்ள ‘இணைப்புத் திட்டக் குழு’வின் வ
-
கொரோனா அச்சுறுத்தல் இருந்தும் மாஸ்க் அணியாமல் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் 'கிம்'
23 May 2022தன்னை தலைவனாக உருவாக்கிய ராணுவ அதிகாரி மரணமடைந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் பங்கேற்றார்.
-
போர்க் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரஷிய வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை உக்ரைன் கோர்ட்டு தீர்ப்பு
23 May 2022ரஷியா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
-
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்கம்: பயிர் உற்பத்தியில் தேசிய அளவில் முதல் 3 இடங்களை அடைய இலக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
23 May 2022பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை
23 May 2022கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
-
கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தன ராஜஸ்தான், மகாராஷ்டிரா
23 May 2022கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநில அரசுகள் குறைத்துள்ளன.
-
விருதுநகரில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி தாக்கல் செய்தார்
23 May 2022விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
-
இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு: ஜப்பான் தொழில் துறையினரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சு
23 May 2022டோக்கியோ : இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறும், இந்தியாவில் முதலீடு செய்யக்கோரி ஜப்பான் தொழில் துறையினருடன் நேற்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
தைவான் மீது சீனா படையெடுத்தால் அந்நாட்டை பாதுகாக்க அமெரிக்கா களத்தில் இறங்கும் அதிபர் ஜோ பைடன் சூளுரை
23 May 2022தைவானை சீனா தாக்கினால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
-
கூட்டணி கட்சிகளால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பாதித்துள்ளது : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
23 May 2022சென்னை : தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் உருவான அரசியல் கூட
-
பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்து பேசுகிறார் : அண்ணாமலை மீது செந்தில்பாலாஜி விமர்சனம்
23 May 2022கரூர் : பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்தும் மறந்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். சிலருக்கு புரிதலும் இல்லை.
-
கோடை விடுமுறையில் வெளியூர் செல்ல மக்கள் ஆர்வம்: அரசு பஸ்களில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் : ஒரே வாரத்தில் இரு மடங்காக அதிகரித்த பயணிகள் எண்ணிக்கை
23 May 2022சென்னை : கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து வெளியூர் மற்றும் சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவதால் அரசு விரைவு பேருந்துகளில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து ப
-
குறுவை சாகுபடிக்கு 3.675 மெ.டன் விதைகள், 56,229 மெ.டன் உரங்கள் இருப்பு வைப்பு : உழவர் நலத்துறை அமைச்சகம் தகவல்
23 May 2022சென்னை : குறுவை சாகுபடி ஆயத்தப் பணிக்காக 3,675 மெட்ரிக் டன் விதைகளும், 56,229 மெட்ரிக் டன் ரசாயன உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உழவர் நலத் துறை அமைச்சகம் தெரிவித்
-
12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி ரயில் சேவை தொடக்கம்
23 May 2022மதுரை : 12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதை அடுத்து மதுரை, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
23 May 2022எங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு விவகாரத்தை பொறுத்தவரை எந்த சமரசத்திற்கும் சலுகைக்கும் இடம் கிடையாது என சீனா தெரிவித்துள்ளது.