முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கு: பெங்களூரு சிறையில் உள்ள ஹரிநாடார் கைது

புதன்கிழமை, 19 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடாரை, திருவான்மியூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகை விஜயலட்சுமி கடந்த 2020-ம் ஆண்டு வீட்டில் தற்கொலைக்கு முயன்றார். அப்போது திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் மற்றும் சதா ஆகியோர் தன்னை மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறியிருந்தார். இதையடுத்து திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்நிலையில், ஏற்கனவே பண மோசடி வழக்கு ஒன்றில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சிறைவாசியாக இருந்து வரும் ஹரிநாடாரை, திருவான்மியூர் போலீசார் கைது செய்துள்ளனர். விஜயலட்சுமி தற்கொலை வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிநாடாரை கைதுசெய்ய அனுமதிக்கக்கோரி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு, திருவான்மியூர் ஆய்வாளர் கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது அவரை கைது செய்துள்ளனர். இதையடுத்து சைதாப்பேட்டை 18-வது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஹரிநாடாரை திருவான்மியூர் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து