முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. அரசு தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது: சேலத்தில் எடப்பாடி குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் தி.மு.க. அரசு ஈடுபட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். 

எடப்பாடி நெடுஞ்சாலை துறை சுற்றுலா மாளிகையில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து அ.தி.மு.க.வின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கிலேயே செயல்பட்டு வருகிறது.  சுமார் 1300 கோடி ரூபாய் மதிப்பில் பொங்கல் தொகுப்பில் இடம்பெற்ற பொருட்கள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கப்பட்டு இருந்த போதும் சுமார் 500 கோடி மதிப்பில் மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  இது போன்ற பெரியதொரு முறைகேடு குற்றச்சாட்டுகளை திசை திருப்பும் நோக்கில் தி.மு.க. அரசு அ.தி.மு.க.வை சார்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதன் நிர்வாகிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதே போல் தற்போது அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றினைக் கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறி விட்டது.  அதன் ஒரு பகுதியாகவே முன்னாள் அமைச்சர் அன்பழகன் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அவதூறு செய்தியை பரப்பி மக்களை திசை திருப்பும் தி.மு.க.வின் அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து