எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோவில்களில் 225 சேவைகளுக்கு இணையம் மூலம் கட்டணச் சீட்டு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) கோவில்களில் இணையவழி மூலம் கட்டணச் சேவைகள் திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதன் பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.,
அனைத்து கோவில் சொத்துக்களின் குத்தகை தாரர்கள் மற்றும் வாடகை தாரர்களுக்கு இணைய வழி மூலமும், வசூல் மையங்களில் கணினி வாயிலாகவும் ரசீதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் வழங்கப்படும் குத்தகை, வாடகைக்தொகை, நாள்தோறும் ஆணையர் அலுவலகத்திலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால், நாளது தேதி வரை ரூ.160 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக திருக்கோயில்களில் உள்ள கட்டணச் சேவைகள் அனைத்தும், இணைய வழியில் முன்பதிவு செய்து கொள்ளவும், திருக்கோயில் கட்டணச்சீட்டு மையங்களில் கணினி வாயிலாகவும் ரசீதுகள் பெறுவதற்கு இந்து சமயஅறநிலையத்துறையின் வலைதளத்தில் (www.tnhrce.tn.gov.in) வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இத்திட்டம், அதிக பக்தர்கள் வருகை தரும் 550 முக்கியத் திருக்கோயில்களில், அர்ச்சனைக் கட்டணம், அபிஷேகக் கட்டணம், சகஸ்ரநாமம், வாகன பூஜைக் கட்டணம், திருமணக் கட்டணம், சந்தனக்காப்பு, நெய்தீபக் கட்டணம், பரிகாரக் கட்டணம், சர்ப்பதோஷ பூஜைக் கட்டணம், சண்முகார்ச்சனை, வைரகிரீட சேவைக் கட்டணம், தங்கரதம், வெள்ளி ரத கட்டணம், சனிப்பெயர்ச்சிக் கட்டணம், குருப்பெயர்ச்சிக் கட்டணம், லட்சார்ச்சனைக் கட்டணம், கோடி அர்ச்சனைக் கட்டணம், ரோப்கார் கட்டணம், மின் இழுவை ரயில் கட்டணம், வடைமாலை கட்டணம், பூச்சொரிதல் கட்டணம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 255 வகையான சேவைகள், இணையவழி மூலம் முன்பதிவாகவும், திருக்கோயில் கட்டனச் சீட்டு மையங்களில் கணினி வாயிலாகவும், ரசீதுகள் வழங்கப்படும்.
இவ்வாறு இணையவழியிலும், கோவில்களில் கணினி மூலம் வழங்கப்படும் ரசீதுகளில் விரைவு பரிசோதனை குறியீடுகள் இருக்கும். இந்த குறியீடுகளை, கோவில்களில் பரிசோதனைக் கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
இணையவழியில் கட்டணத்தை செலுத்தியவுடன் ரசீதுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ரசீதுகள் பக்தர்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். பக்தர்கள் தொகையை செலுத்தியதற்கான சரிபார்ப்பு பட்டணைத் தேர்வு செய்து பக்தர்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்தும் ரசீதினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையவழி மூலம் முன்பதிவு செய்பவர்கள் தங்களது அலைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ரசீதினை உபயோகம் செய்தால் போதுமானது. சேவைக்கட்டணம் ரசீது பெறுவது தொடர்பாக குறைபாடுகள் இருப்பின் அதனை ஆணையர் அலுவலக உதவி மைய தொலைபேசி 04428339999 எண்ணிற்கு தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்,
கோவில் நிருவாகத்தால் சேவைக் கட்டணச்சீட்டு ஒளிவு மறைவற்ற வகையிலும் இருப்பதோடு தொலைதூரப் பக்தர்கள் தங்களது ஆன்மீக பயனத்திட்டத்தினை முன்கூட்டியே செய்து காலவிரயத்தை தவிர்க்க முடியும். மேலும், கூட்ட நெரிசலைத் தவிர்த்து சிரமமின்றி நிரைவான தரிசனத்தை பெறலாம். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
20 Jul 2025சென்னை : 2026 சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
நடப்பாண்டில் 3-வது முறை நிரம்பியது மேட்டூர் அணை
20 Jul 2025மேட்டூர் : மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று காலை 8 மணிக்கு எட்டியது.
-
தர்மஸ்தலா கோவில் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது கர்நாடக அரசு
20 Jul 2025மங்களூரு : தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில் கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம்: உதயநிதி ஸ்டாலின்
20 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
சேலத்தில் இன்று நடைபெறுகிறது த.வெ.க.வின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
20 Jul 2025சென்னை : சேலத்தில் இன்று மாலை பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
-
3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
20 Jul 2025புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற
-
மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
20 Jul 2025மதுரை : கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
20 Jul 2025மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி
20 Jul 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி பாராளுமன்றத்தில் பேச மத்திய அரசு தயார்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதி
20 Jul 2025புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாராளுமன்றத்தில் மத்திய அரசு பேச தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.
-
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
20 Jul 2025திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
20 Jul 2025மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமை
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
20 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மூவர் இடைநீக்கம்: ராமதாஸ் அதிரடி
20 Jul 2025சென்னை : கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பா.ம.க.
-
அமர்நாத் யாத்திரை: ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
20 Jul 2025ஜம்மு : அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
-
சட்டமன்றக் கூட்டத்தில் செல்போனில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர்
20 Jul 2025மும்பை : மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாரின் கார்
20 Jul 2025ரோம் : ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்: கேரளா ஐகோர்ட் உத்தரவு
20 Jul 2025திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க பரிசல் இயக்கவும் மீண்டும் தடை
20 Jul 2025தருமபுரி : ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,000 கன அடியிலிருந்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ளதை அடுத்து அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்
-
விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
20 Jul 2025புதுடில்லி : ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவ
-
முதற்கட்ட பயணம் வெற்றி: தமிழக மக்களுக்கு இ.பி.எஸ். நன்றி
20 Jul 2025சென்னை : "மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்ற எனது முதற்கட்ட பயணத்தை வெற்றிகரமாக மாற்றி காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்று அ.தி.மு.க.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தாமதமாக இயக்கம்
20 Jul 2025சென்னை : சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.
-
திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
20 Jul 2025திருச்செந்தூர் : ஆடி கிருத்திகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.