திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள 'ஆய்வக மெக்கானிக்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : என் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று மீண்டும் தெரிவித்துள்ளார் மதுரை ஆதீனம்.
தருமபுர ஆதீனம் மடத்தில் பல்லக்கு சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. இதை வரவேற்று மதுரை ஆதீனம் மடம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் பேசுகையில் கூறியதாவது:
“திருவையாறு நந்தி பெருமானின் 16 திருமுறைகளில் ‘ஆடும் பல்லக்கு’ இடம்பெற்று உள்ளது. இது நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வரும் மங்கள நிகழ்வு ஆகும். இதற்கு தமிழக அரசு நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தருமபுரம் ஆதீனம் மடத்தில் பல்லக்கு சேவை நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் அனைத்து மதத்தினருக்கும் சமய சம்பிரதாய கடமைகள் உள்ளன. அவற்றை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அனைத்து மதத்தினரையும் தமிழக முதல்வர் அரவணைத்துச் செல்ல வேண்டும்.
தருமபுரம் ஆதீனம் மடத்தில் பல்லக்கு சேவைக்கு தமிழக அரசு தடை விதிக்க, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உந்துசக்தியாக இருந்தார். இதன் காரணமாகவே தருமபுரம் ஆதீனம் மடத்தில் பல்லக்கு நிகழ்வு உலக அளவில் பரவியது. இதற்காக திராவிடர் கழகத் தலைவர் வீரமணிக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விஷயத்தில் நடந்தது நடந்து விட்டது. இனி நடப்பது நல்லதாக அமைய வேண்டும். தருமபுரம் ஆதீனம் பல்லக்கு சேவைக்கு ஜியர் சுவாமிகள் ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டு இருந்தார். அவருக்கு இந்த நேரத்தில் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சைவம், வைணவம் பேதமின்றி அனைவரும் எங்களுக்கு ஆதரவாக நின்றது மகிழ்ச்சி தருகிறது.
எனக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வருகிறது. இதற்கு அரசியல் பின்புலமும் உள்ளது. ‘இது யாருக்கும் அடிபணியாத அரசு’ என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். எனவே அடுத்த ஆண்டு தருமபுரம் ஆதீனம் மடத்தில் பல்லக்கு சேவை நடக்குமா? என்பது பற்றி அப்போது பார்த்துக் கொள்ளலாம்.
‘நான் தருமபுரம் கோவிலுக்கு வரக்கூடாது’ என்று மிரட்டுகிறார்கள். இதனை தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன். எனக்கு கோவில்களில் அன்னதானம் வழங்க திரைமறைவில் தடை விதிக்கப்படுகிறது. எங்களுக்கு கோவில் நிர்வாகம் ஒத்துழைப்பு தருவதில்லை.
தமிழகத்தில் பிரபல கோவில்களில் சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதில் நான் தொடர்ந்து உறுதியாக உள்ளேன். என் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே மத்திய அரசு எனக்கு பாதுகாப்பு தரும் என்று நம்புகிறேன். பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பு பற்றி அப்போது பேசலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
தாமஸ் கோப்பை பாட்மிண்டனில் சாம்பியன்: இந்தியா அணிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தது மத்திய அரசு
16 May 2022பாங்காக் : தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்தோனேஷியாவை வீழ்த்தி, இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 17-05-2022
17 May 2022 -
நடப்பு ஐ.பி.எல் தொடர்: பிளேஆப் சுற்றுக்கு நுழைய 5 அணிகள் கடும் போட்டி
16 May 2022மும்பை : நடப்பு ஐ.பி.எல் தொடரில் பிளேஆப் சுற்றுக்கு நுழைய பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 5 அணிகள் கடும் போட்டி நிலவுகிறது.
-
பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் ஷமி, முகேஷ் செளத்திரிக்கு முதலிடம்
16 May 2022பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் ஷமி, முகேஷ் செளத்திரிக்கு முதலிடம்
-
சென்னை அணியில் டோனி மேலும் சில ஆண்டுகள் தொடர வாய்ப்பு : சுனில் கவாஸ்கர் கணிப்பு
16 May 2022மும்பை : சி.எஸ்.கே-வில் தொடர விரும்பவில்லை எனில் டோனி மீண்டும் கேப்டனாகி இருக்க மாட்டார் என்று தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர் சென்னை அணியில் டோனி மேலும் சில ஆண்டுகள் தொட
-
தமிழகத்தை சேர்ந்த சாய் கிஷோருக்கு டோனி புகழாரம்
16 May 2022மும்பை : தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரை புகழ்ந்துள்ளார் டோனி. அந்த வீரர் நடப்பு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார்.
-
இத்தாலி ஓபன் - தொடர்ச்சியாக 5 தொடர்களில் இஹா சாம்பியன்
16 May 2022இத்தாலி ஓபன் போட்டியில் ரோம் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் துனிசிய வீராங்கனை ஜபர் உடன் இஹா மோதினார்.
-
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: மேத்யூஸ் அதிரடியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 397 ரன்கள் குவிப்பு
16 May 2022சட்டோகிராம் : வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேத்யூஸ் அதிரடியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 397 ரன்கள் குவித்துள்ளது.
-
ஐ.பி.எல். 63-வது லீக் போட்டி: புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம்: லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான்
16 May 2022லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
-
தமிழகத்தில் அனைத்து ஏரிகளையும் தூர்வாருவதற்கு "டிரிபிள் ஆர்" திட்டம் : அமைச்சர் துரைமுருகன் தகவல்
17 May 2022சென்னை : தமிழகத்தில் அனைத்து ஏரிகளையும் தூர் வாருவதற்கு என டிரிப்பில் ஆர் என்று ஒரு திட்டம் இருப்பதாகவும், அதனை செயல்படுத்த உள்ளதாகவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன
-
போலீசாரின் புத்துணர்வு பயிற்சிக்கு ரூ. 10 கோடியில் புதிய திட்டம் : டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்
17 May 2022சென்னை : போலீசாருக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ரூ. 10 கோடி செலவில் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
-
ரூ. 46 கோடியில் 256 நடமாடும் மருத்துவமனைகளின் சேவை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
17 May 2022சென்னை : சென்னை, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ.
-
மத்திய அமைச்சர்களுடன் இன்று தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு : நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
17 May 2022சென்னை : தி.மு.க.
-
இலங்கை மக்களுக்கு உதவ சென்னையில் இருந்து நிவாரண பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று புறப்படுகிறது
17 May 2022சென்னை : சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உள்ளது.
-
மாணவர்கள் இனி வன்முறையில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை : சென்னை போலீஸ் கமிஷ்னர் எச்சரிக்கை
17 May 2022சென்னை : மாணவர்கள் இனி வன்முறையில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
கோதுமை ஏற்றுமதிக்கான தடையை இந்தியா மறு பரிசீலனை செய்யும் : அமெரிக்கா நம்பிக்கை
17 May 2022வாஷிங்டன் : கோதுமை ஏற்றமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-
திறமையான மாணவர்களை உருவாக்கவே தமிழகத்தில் நான் முதல்வன் திட்டம் : தனியார் பல்கலை. விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
17 May 2022செங்கல்பட்டு : உலகத்திலேயே திறமையான மாணவர்கள் தமிழகத்தில் இருந்துதான் கிடைக்கிறார்கள் என்கிற நிலையை உருவாக்கவே நான் முதல்வன் என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு
-
செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி: வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
17 May 2022சென்னை : செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் பயன்படுத்தவிருந்த பிட் பேப்பர்கள் கொல்லிமலை ஜெராக்ஸ் கடையில் கண்டுபிடிப்பு : அரசு தேர்வுகள் பறக்கும்படையினர் பறிமுதல்
17 May 2022நாமக்கல் : கொல்லிமலை வாழவந்தி நாடு பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளுக்கான பிட் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கியது தெரிந்து, அரசு தேர்வுகள்
-
நெல்லை குவாரி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
17 May 2022சென்னை : திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.
-
அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் அரசு செயல்படுத்த வேண்டும்: எடப்பாடி
17 May 2022சென்னை : அம்மா மினி கிளினிக் திட்டத்தை தமிழக அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
திரிகோணமலையில் இருந்து வெளியேறினாரா மகிந்த ராஜபக்சே?
17 May 2022கொழும்பு : திரிகோணமலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் முன்னாள் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரு நாளைக்கு தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது: இலங்கை மக்களுக்கு இரு மாதங்கள் மிக கடினமானதாக இருக்கும்: ரணில் பேச்சு
17 May 2022கொழும்பு : கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது என்றும், இலங்கை மக்களுக்கு அடுத்து இரு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கப்போகிறது என்றும் பிரதமர
-
பிரான்சின் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம் : அதிபர் மேக்ரான் அறிவிப்பு
17 May 2022பாரிஸ் : பிரான்சின் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ளார்.
-
இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், பாலஸ்தீனர்கள் இடையே மோதல் : 100-க்கும் மேற்பட்டோர் காயம்
17 May 2022ஜெருசலேம் : இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நடைபெற்ற மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.