முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புது டெல்லியில் ஏ.ஐ. உச்சி மாநாடு தொடக்கம்: ஏ.ஐ. வளர்ச்சியில் இந்தியா முன்னணியில் உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2026      இந்தியா
PM-Modi-2026-02-16

புது டெல்லி, புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா ஏ.ஐ. உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். மேலும், ஏ.ஐ. வளர்ச்சியில் இந்தியா முன்னணியில் உள்ளது என்றும், ஏ.ஐ.-யின் வளர்ச்சி இந்தியாவின் லட்சியத்தையும், பொறுப்பையும் பிரதிபலிக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா ஏ.ஐ. உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஐ.நா பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இம்மாநாடு பிப்ரவரி 16-20 வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஏ.ஐ. பற்றி விவாதிக்க உலகை ஒன்றிணைக்கிறோம். இன்று (நேற்று) முதல், டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டை நடத்துகிறது. இந்த உச்சி மாநாட்டுக்கு உலகத் தலைவர்கள், தொழில்துறைத் தலைவர்கள், புதுமைவிரும்பிகள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களை நான் அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள் அனைவருக்கும் நலன், அனைவருக்கும் மகிழ்ச்சி என்பதாகும். மனிதனை மையமாகக் கொண்ட முன்னேற்றத்திற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டை இம்மாநாடு பிரதிபலிக்கிறது.

செயற்கை நுண்ணறிவு இன்று சுகாதாரம், கல்வி, விவசாயம், நிர்வாகம் மற்றும் தொழில்முனைவு உள்ளிட்ட பல துறைகளை மாற்றி வருகிறது. இந்த ஏ.ஐ. உச்சி மாநாடு புதுமை, ஒத்துழைப்பு, பொறுப்பான பயன்பாடு மற்றும் ஏ.ஐ. இன் பல்வேறு அம்சங்கள் குறித்த உலகளாவிய விவாதத்தை வளப்படுத்தும்.

இந்த உச்சி மாநாட்டின் முடிவுகள் முற்போக்கான, புதுமையான மற்றும் வாய்ப்பு சார்ந்த எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் என்று நான் நம்புகிறேன். இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கு நன்றி, நமது நாடு ஏ.ஐ. மாற்றத்தில் முன்னணியில் உள்ளது. டிஜிட்டல் உள்கட்டமைப்பு முதல் துடிப்பான ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் அதிநவீன ஆராய்ச்சி வரை, ஏ.ஐ. இல் நமது முன்னேற்றங்கள் லட்சியத்தையும் பொறுப்பையும் பிரதிபலிக்கின்றன” என்று பிரதமர் மோடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து