முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுதங்களை பயன்படுத்த நினைத்தால் கடும் விளைவு ஏற்படும் : நேட்டோவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

சனிக்கிழமை, 14 மே 2022      உலகம்
Russia 2022-05-14

Source: provided

மாஸ்கோ : எல்லைகளில் நேட்டோ அணு ஆயுதங்களை கொண்டு வந்து நிறுத்தினால், நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வோம். அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. 

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 80 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த படையெடுப்பிற்கு உக்ரைன் நேட்டோவில் இணைய இருந்ததே காரணம் என கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதால் அஞ்சிய  பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் பாதுகாப்புக்காக நேட்டோவில் இணையப் போவதாக கூறி வருகின்றன.  இரண்டு நாடுகளும் ஓரிரு வாரங்களில் நேட்டோவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு ரஷ்யா மூலம்  ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் நேட்டோ படைகள் ஓர் ஆண்டுகள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இரு நாடுகளும் கோரிக்கை விடுத்திருந்தன. 

இந்நிலையில் தங்களுடைய அச்சுறுத்தலுக்காக இரு நாடுகளும் நேட்டோவில் இணைவதாக கூறுவது உண்மையான காரணம் போல தோன்றவில்லை என ரஷ்ய அமைச்சர் அலெக்சாண்டர் குருஷ்கோ தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு பின்லாந்து மற்றும் சுவீடன் நாடுகளுடன் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களுக்கு எதிரான விரோத நோக்கங்களும் எங்களுக்கு இல்லை.

இந்த நிலையில் அச்சுறுத்தலுக்கு பயந்து இரு நாடுகளும் நேட்டோவில் இனைவது உண்மை என்று தோன்றவில்லை.  ஒருவேளை நேட்டோ ரஷ்ய எல்லைகளில் அணு ஆயுதங்களை கொண்டு வந்து நிறுத்தினால், நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வோம். அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என  கூறினார். இதை தொடர்ந்து ரஷ்யா பின்ன்லாந்துக்கு அளித்து வரும் மின்சார விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக பின்லாந்து மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து