ஆவின் நிறுவனத்தில் உள்ள 'கால்நடை ஆலோசகர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று போக்குவரத்துத் துறை சார்பில் பொது மக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக நிர்பயா பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ், 2500 மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் அவசர பொத்தான்கள் பொருத்தும் பணியின் முதற்கட்டமாக 500 பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டு அதன் முன்னோட்ட செயல்பாட்டினை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த முன்னோட்ட வெளியீட்டின் நோக்கம், நிர்பயா பாதுகாப்பான நகரத் திட்டத்தை செயல்படுத்துவதும், காவல் துறை மற்றும் மருத்துவ அவசர ஊர்தியின் கட்டளை மையத்துடன் நேரடி தொடர்பு கொள்வதாகும். இதற்காக, ஒவ்வொரு பேருந்திலும் மூன்று கேமராக்கள், நான்கு அவசர அழைப்பு பொத்தான்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் (MNVR) 4G GSM SIM வழியாக கிளவுட் (Cloud) அடிப்படையிலான கட்டளை மைய பயன்பாட்டுடன் இணைக்கப்படும்.
இம்முழு அமைப்பும் மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை வழியாக கண்காணிக்கப்படும். இதன் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கான தகவல் மையம் (Data Center) கிளவுட் (Cloud) உடன் இணையும். பயணம் செய்யும் பயணிகளுக்கு மற்றவர்களால் ஏற்படும் அசௌகரியங்களின் போதும், பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய நிகழ்வுகளின் போதும், அவசர அழைப்பு பொத்தான்களை அழுத்தி, அந்நிகழ்வுகளை பதிவு செய்யலாம். அவ்வாறு செய்வதன் மூலம், கட்டளை மையத்தில், பேருந்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ பதிவின் சில வினாடி முன் தொகுப்புடன் ஒரு எச்சரிக்கை மணி ஒலிக்கும். இந்த ஒலி தூண்டுதலை கொண்டு, செயலியை இயக்குபவர் நிலைமையைக் கண்காணித்து, நிகழ்நேர அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஆவன செய்வார். இதற்காக கட்டளை மையம், காவல்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் அவசரகால பதில் மையத்துடன் இணைக்கப்படும். இத்திட்டத்தின் செயல்பாட்டின் போது, நிகழ் நேர அவசர அழைப்புகள் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 31 பணிமனைகள் மற்றும் 35 பேருந்து முனையங்கள் முழுவதும் மைய கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது. இத்திட்டத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அடிப்படையிலான வீடியோ பகுப்பாய்வு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், காணாமல் போனவர்களைக் கண்டறியவும், குற்றவாளிகள் என அறியப்பட்டவர்களை அடையாளம் காணவும் முடியும். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் போக்குவரத்துத் துறை, காவல் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி ஆகிய துறைகளின் பல வகையான பயன்பாடுகளுக்கு பேருதவியாக இருக்கும்.
மேலும், அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் (மாநகர் போக்குவரத்துக் கழகம் நீங்கலாக) மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் பணியாற்றி, பணியின் போது உயிரிழந்த 136 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், 5 ஓட்டுநருடன் கூடிய நடத்துனர், 21 ஓட்டுநர்கள், 106 நடத்துனர்கள், தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் 4 நபர்களுக்கு இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் கே.கோபால், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசனை
21 May 2022ஊட்டி : பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து நளினி உள்ளிட்ட மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 21-05-2022
21 May 2022 -
ரூ. 20 லட்சத்தில் உதகையை கண்டறிந்த ஜான் சல்லீவனுக்கு வெண்கல சிலை : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 May 2022உதகை : நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில், 200 ஆண்டுகளுக்கு முன்பு உதகை நகரினை கண்டறிந்து கட்டமைத்த ஜான் சல்லிவனுக்கு 20 ல
-
ஆட்சியில் இல்லாத போதும் மக்களுக்காக பணியாற்றும் இயக்கம் தி.மு.க.தான் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 May 2022ஊட்டி : ஆட்சியில் இல்லாத போதும் மக்களுக்காக பணியாற்றும் இயக்கம் தி.மு.க.தான் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
இயல்பு வாழ்க்கை திரும்புவதால் இலங்கையில் அவசர நிலை வாபஸ்
21 May 2022கொழும்பு : இலங்கையில் வன்முறை தணிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதையடுத்து, இலங்கையில் அவசர நிலை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
-
கர்நாடக மாநிலத்தில் சோகம்: திருமண விழாவிற்கு சென்ற ஜீப் விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு
21 May 2022கர்நாடகாவில் திருமண விழாவிற்கு சென்ற ஜீப் சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் மணமகளின் தாய் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
-
தருமபுரம் ஆதீன மடத்தில் இன்று பட்டின பிரவேசம் நிகழ்ச்சி : ஆதீனகர்த்தர்கள், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு
21 May 2022மயிலாடுதுறை : தருமபுரம் ஆதீன திருமடத்தில் இன்று நடைபெறும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பல்வேறு ஆதீனகர்த்தர்கள், பா.ஜ.க.
-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
21 May 2022சென்னை : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
தமிழகத்தில் பி ஏ-4 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
21 May 2022சென்னை : தமிழகத்தில் பி ஏ-4 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
-
குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
21 May 2022உதகை : 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ், குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை நீலகிரி மாவட்டம், தொட்டபெ
-
செயல்பாடுகளை விமர்சித்ததால் முன்னாள் உலக செஸ் சாம்பியனை உளவாளி பட்டியலில் சேர்த்த ரஷ்யா
21 May 2022மாஸ்கோ : ரஷ்யாவின் செயல்பாடுகளை விமர்சித்ததால் முன்னாள் உலக செஸ் சாம்பியனை உளவாளி பட்டியலில் அந்நாட்டு நீதித்துறை அமைச்சகம் சேர்த்துள்ளது.
-
பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் : 28-ம் தேதி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
21 May 2022சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி நியமிக்கப்பட உள்ளார். அதற்கான அறிவிப்பு வரும் 28-ம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
புதுவை மாநில கவர்னர் தமிழிசை கையில் பாம்பு : வைரலாகும் விடியோ
21 May 2022புதுச்சேரி : புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறுவர்களுடன் ரயில் பயணம் செய்து, மயில்களையும், பாம்புகளையும், பறவைகளையும் கைகளில் தூக்கி வைத்து கொஞ்சிய விட
-
தமிழகம் முழுவதும் 117 மையங்களில் நடந்த குரூப்-2 முதல்நிலை தேர்வு: 11.78 லட்சம் பேர் எழுதினார்கள்
21 May 2022சென்னை : தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 117 மையங்களில் நேற்று குரூப் -2 முதல்நிலை தேர்வு நடந்தது.
-
இந்தியாவில் சீன ஆக்கிரமிப்பு காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது: மத்திய அரசு விளக்கம்
21 May 2022இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் சீனா பாலம் கட்டி வரும் பகுதி 60 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் அந்த நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று பாரதிய ஜனதா தலைம
-
ராஜீவ் காந்தியின் நினைவு தினம்: உதகையில் உருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
21 May 2022உதகை : மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி உதகையில் அமைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.&n
-
பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் யார்? - -தமிழகம் உட்பட 5 மாநில கருத்து கணிப்பில் மோடிக்கு முதலிடம்
21 May 2022புதுடெல்லி : தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்து ஓராண்டு ஆன நிலையில், அடுத்த தேர்தலில் பிரதமர் பதவிக்கு யார் மிகவும் பொருத்தமானவர்?
-
கொரோனாவை கட்டுப்படுத்த இஞ்சி, மூலிகை தேநீர் பருகுங்கள் : நாட்டு மக்களுக்கு வடகொரிய அரசு பரிந்துரை
21 May 2022பியோங்கியாங் : கொரோனாவை கட்டுப்படுத்த இஞ்சி, மூலிகை தேநீரை பருக நாட்டு மக்களுக்கு வடகொரிய அரசு பரிந்துரைத்துள்ளது.
-
சலுகைகளை நிராகரித்தார் தலைமை தேர்தல் ஆணையர்
21 May 2022இந்திய தலைமை தேர்தல் ஆணையரும், தேர்தல் ஆணையரும், சிக்கன நடவடிக்கையாக தங்களுக்கு வழங்கப்படும் ஊக்கச் சலுகைக்கான வரி விலக்கு, சுற்றுலா பயணப் படி ஆகியவற்றை ஏற்க மறுத்துள்ள
-
அசாம் மழை, வெள்ளம்: 8.39 லட்சம் பேர் பாதிப்பு பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
21 May 2022அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 9 பேரும், நிலச்சரிவுகளில் சிக்கி 5 பேரும் என மொத்தம் 14 பேர் உயிரிழந்து உள்ளனர்.
-
ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கம்மை நோய் பரவுவதை தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு: மத்திய அரசு உத்தரவு
21 May 2022ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வரும்குரங்கம்மை நோய் பரவுவதை தடுக்க இந்திய விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் இது
-
கேன்ஸ் திரைப்பட விழாவில் மேலாடை ஏதும் அணியாமல் உக்ரைன் பெண் போராட்டம்
21 May 2022பாரீஸ் : கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பின்போது, பெண் ஒருவர் மேலாடை அணியாமல் தனது உடலில் உக்ரைன் கொடியின் வண்ணங்களை வரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட
-
உதகை -200 துவக்க விழா: ரூ. 56.36 கோடியில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின் : பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்
21 May 2022உதகை : நீலகிரி மாவட்டம், உதகை அரசினர் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், உதகை – 200 விழாவினை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மேட்டூர் அணை நீர்மட்டம் 115.35 அடியாக அதிகரிப்பு : தண்டோரா மூலம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
21 May 2022மேட்டூர் : கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
-
நாய் உணவை சாப்பிட்டால் ரூ. 5 லட்சம் சம்பளம் : இங்கிலாந்து நிறுவனம் அறிவிப்பு
21 May 2022லண்டன் : இங்கிலாந்தில் உள்ள நிறுவனம் ஒன்று நாய் உணவை 5 நாட்கள் சாப்பிடும் நபருக்கு ரூ. 5 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.