Idhayam Matrimony

வரும் 25-ம் தேதி 3-வது முறையாக நடக்கும் குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தல்

சனிக்கிழமை, 14 மே 2022      தமிழகம்
vote-2022-05-14

Source: provided

தென்காசி : குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தல் வருகிற 25-ம் தேதி நடைபெறுகிறது. 

தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் இரண்டாவது முறையாக கடந்த மார்ச் 26-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. போதிய உறுப்பினர்கள் வருகை தராததால் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் கடந்த 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் குற்றாலம் பேரூராட்சி தேர்தல் வரும் 25-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி செயல் அலுவலர் விடுத்துள்ள அறிக்கையில், குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி, பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக பேரூராட்சி உறுப்பினர்களின் கூட்டம் வரும் 25.05.2022 அன்று 9.30 முற்பகல் மணிக்கு குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெறும். தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பேரூராட்சி அனைத்து வார்டு உறுப்பினர்களும் கோரப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து