தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டெல்சாஸ் : அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. பள்ளி, வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் துப்பாக்கி சூடு நடக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க வரலாற்றில் பள்ளியில் மோசமான துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டெக்சாஸ் மாகாணம் உவால்டே நகரில் தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் வாலிபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர் திடீரென்று அங்கிருந்த மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.
இதனால் மாணவர்கள் அலறியடித்தபடி ஓடினார்கள். துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். அதே போல் ஆசிரியர்கள் சிலரும் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.
போலீசார் பள்ளியை சுற்றிவளைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் பள்ளிக்குள் நுழைந்து வாலிபரை பிடிக்க முயற்சித்தனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலியானார். வாலிபர் நடத்திய கொடூர துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு ஆசிரியர் உள்பட 2 பேர் பலியானார்கள். படுகாயம் அடைந்த மாணவர்கள் பலரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து பள்ளி முன்பு பெற்றோர்கள் குவிந்தனர். உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் கதறி அழுதது நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. பள்ளிக்குள் இருந்த மாணவர்களை போலீசார் வெளியே அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் அப்பகுதியை சேர்ந்த சால்வடார் ராமோஸ் என்பது தெரியவந்தது.
18 வயதான இவர் தனது பாட்டியை வீட்டில் வைத்து கொலை செய்து விட்டு பின்னர் தொடக்கப் பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரின் மற்ற விபரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை. இதனால் அவர் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் பற்றி தெரியவில்லை. பலியான மாணவர்கள் 5 முதல் 11 வயதுக்குட்பட்டவர்கள் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு பற்றி ஜப்பானில் இருந்த அமெரிக்க அதிபர் ஜோபைடனிடம் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர் தனது அனுதாபத்தை தெரிவித்தார். பின்னர் ஜப்பானில் இருந்து நாடு திரும்பிய ஜோபைடன் கூறும் போது,
கடவுளின் பெயரால் நாம் எப்போது துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக நிற்கப் போகிறோம்? இது போன்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் உலகில் வேறு எங்கும் அரிதாகவே நடக்கிறது. துப்பாக்கி சூடு சம்பவங்களுக்கு எதிராக நாம் செயல்பட வேண்டும். தொடக்கப்பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் உயிரிழப்பால் நான் சோகத்தில் இருக்கிறேன் என்றார். பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வெள்ளை மாளிகை மற்றும் மற்ற அரசு கட்டிடங்களில் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று அதிபர் ஜோபைடன் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 3 days 18 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 6 days 19 hours ago |
பாசி பருப்பு பாயாசம்![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 02-07-2022.
02 Jul 2022 -
மீண்டும் வர்ணனைக்கு திரும்பிய ரவி சாஸ்திரி
01 Jul 2022இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் 2021 டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது.
-
பாவோ நூர்மி ஈட்டி எறிதல் போட்டி: புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா
01 Jul 2022ஸ்டாக்ஹோம் : பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் 89.30 மீட்டர் தூரம் எறிந்து தேசிய சாதனை படைத்திருந்தார்.
-
சர்ச்சை பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி விட்டது: நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் : வழக்குகளை மாற்றக்கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் கண்டனம்
01 Jul 2022புதுடெல்லி : முஸ்லிம்களின் இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் நுபுர் சர்மா பேசியது நாடு முழுவதும் முஸ்லிம்களை வெகுண்டெழச் செய்துள்ளது.
-
டுவிட்டரில் தனது கட்சி பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி
01 Jul 2022சென்னை : அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தனது கட்சி பொறுப்பை தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் அ.தி.மு.க தலைமை நிலையச்செயலாளர் என்று மாற்றியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
-
மீண்டும் ஷிகர் தவான் தேர்வு: இங்கிலாந்து எதிரான 3 டி-20, 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
01 Jul 2022மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை : நிரந்தர பணி நியமனம் செய்வதில் என்ன பிரச்சினை என கேள்வி
01 Jul 2022மதுரை : ஆசிரியர்கள் நியமனம் மாணவர்களின் நலன் சார்ந்தது என்ற தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்
-
வெள்ளப் பெருக்கு குறைந்ததால் குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
01 Jul 2022தென்காசி : குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
01 Jul 2022சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (ஜூலை 1) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
-
பெரும்பான்மையை நிரூபிக்கிறார் ஷிண்டே: மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் ஜூலை 4-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு
01 Jul 2022மும்பை : பா.ஜ.க ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குழுத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 4-ம் தேதி (வரு
-
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
01 Jul 2022சென்னை : காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
5 ஆண்டுகளில் ஜிஎஸ்டி நடைமுறையில் பல விதமான சவால்களை சந்தித்தோம் : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
01 Jul 2022புதுடெல்லி : நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வசூல் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1.44 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தெரிவ
-
விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு: தங்கத்திற்கான இறக்குமதி வரியை 5 சதவீதம் உயர்த்தியது மத்திய அரசு
01 Jul 2022மும்பை : தங்கத்திற்கான இறக்குமதி வரியை 5 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இந்தியாவில் தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
-
இங்கி.,க்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்
01 Jul 2022பர்மிங்காம் : இந்தியாவுக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்திருக்கிறது.
-
ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 12 வரை பார்லி., மழைக்கால கூட்டத்தொடர்
01 Jul 2022புதுடெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கும் என மக்களவை செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கேப்டன் பொறுப்பு குறித்து நினைவுகளை பகிர்ந்த பும்ரா
01 Jul 2022எட்ஜ்பாஸ்டன் : இந்திய அணியை தலைமை தாங்கி வழிநடத்துவதற்கு முன்னதாக வேறு எந்த அணிக்கும் தான் கேப்டனாக இருந்ததில்லை என டோனி தன்னிடம் சொன்னதாக இந்திய அணியின் கேப்டன் பும்ரா
-
தமிழக அரசு உருவாக்கியது மாநில அணை பாதுகாப்பு அமைப்பு
01 Jul 2022சென்னை : மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மாநில அணை பாதுகாப்பு அமைப்பை தமிழக அரசு ஏற்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
உதய்பூர் படுகொலை தொடர்பாக டி.ஜி.பி உள்ளிட்ட 32 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
01 Jul 2022உதய்பூர் : உதய்பூரில் நடத்தப்பட்ட படுகொலை சம்பவத்தால் சட்ட ஒழுங்கின் மேல் எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து மாநில காவல்துறை தலைவர் உள்பட மூத்த ஐபிஎஸ் காவல் அதிகாரிகள் 32 ப
-
சுதந்திர, குடியரசு நாளைவிட முக்கியமானது ஜி.எஸ்.டி நாள் : கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
01 Jul 2022சென்னை : சுதந்திர நாள், குடியரசு நாளைவிட ஜிஎஸ்டி 5 ஆம் ஆண்டு நாள் மிகவும் முக்கியமானது என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
-
ஜூன் மாத ஜி.எஸ்.டி. வசூல் 1.44 லட்சம் கோடி ரூபாய் : மத்திய நிதித் துறை அமைச்சகம் தகவல்
01 Jul 2022புதுடெல்லி : சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வசூல் நடப்பாண்டு ஜூன் மாதத்தில் ரூ.1.44 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தில் ரூ.1.41 லட்சம் கோடி வச
-
பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று சென்னை வருகை
01 Jul 2022சென்னை : ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது. பா.ஜ.க.
-
உதய்பூர் படுகொலை: மேலும் இருவர் கைது
01 Jul 2022முஹம்மது நபி பற்றிய நுபுர் ஷர்மாவின் கருத்தை ஆதரித்ததற்காக தையல்காரர் கன்னையா லால் ஜூன் 28 அன்று அவரது கடையில் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
-
ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா மனு
01 Jul 2022புதுடெல்லி : மகாராஷ்டிரத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா தலைவர் சுனில் பிரபு மனு தாக்கல் செய்துள்ளார
-
சரக்கு மற்றும் சேவை வரி மிகப்பெரிய வரி சீர்திருத்தம் : பிரதமர் நரேந்திர மோடி டுவிட்
01 Jul 2022புதுடெல்லி : சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) மிகப்பெரிய வரி சீர்திருத்தம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இதன் மூலம் ஒரே நாடு ஒரே வரி என்ற தொலைநோக்கு பார்வை நிறைவ
-
தேசிய மருத்துவர்கள் நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
01 Jul 2022புதுடெல்லி : தேசிய மருத்துவர் நாளையொட்டி, நேற்று மருத்துவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.